ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களின் பணிசெயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட்கார்டை ஆன்லைன் மூலம் அரசிடம் தாக்கல்செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அதிகாரிகளின் பணிசெயல்பாடு விகிதம், நம்பகத்தன்மை ஆகியவற்றை தெரிந்துகொள்ள உதவும் என அரசு கருதுகிறது. அவ்வாறு தாக்கல்செய்யப்படும் ரிப்போர்ட் கார்டுகள் மீது அரசு அலுவலர்கள், அரசியல் பிரதிநிதிகள் தங்களின் விமர்சனங்களை, எலக்ட்ரானிக் முறையில் பதிவிடமும் வழிவகைசெய்யப்பட உள்ளது.
தற்போது பரிசீலனையில் இருக்கும் இந்தவிதிமுறைக்கு அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இந்தவிதிமுறை நாடு முழுவதிலும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ல் தங்களின் ரிப்போர்ட்கார்டுகளை அரசிடம் தாக்கல் செய்யவேண்டும்.
அதிகாரிகள் தாக்கல்செய்யும் ரிப்போர்டு கார்டுகளை சரிபார்த்து, அதுபற்றிய விமர்சனங்களை மார்ச் 15 ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் பயிற்சித் துறை கடிதம் அனுப்பி உள்ளது.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.