நாடுமுழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் மத்திய அரசு தடைவிதித்துள்ள நிலையில், இது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள், பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கலாம், அவை குறித்து பரிசீலிக்கப் படும் என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தவிவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மாட்டிறைச்சி தடை என்பது மத்திய அரசின் கவுரவபிரச்சினை இல்லை. எந்தவொரு சமுதாயத்தையோ, உணவு பழக்கவழக்கத்தையோ, இறைச்சி தொழிலையோ குறிவைத்து அரசாணை வெளியிடப்பட வில்லை. இந்த விதிகளால் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்ற ஹர்ஷ் வர்தன், இந்த விவகாரம் தொடர்பாக பொது மக்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கலாம். அவற்றைபரிசீலிக்க அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.