மலிவு விலையில் தக்காளி விற்பனையை தொடங்கிவைத்தார் -மத்திய அமைச்சர்

தலைநகர் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக, தேசிய கூட்டுறவு நுகர்வோர் விற்பனை இணையம் வாயிலாக வேன் மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி இன்று  (29.07.2024) தொடங்கிவைத்தார். தில்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ ரூ.60 விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. நாடாளுமன்ற வீதி, மத்திய அரசு அலுவலக வளாகம், லோதி காலனி, ஐடிஓ, ஐஎன்ஏ மார்கெட், மண்டி ஹவுஸ், துவாரகா, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட 18 சில்லரை விற்பனை மையங்களில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரலாத் ஜோஷி, இன்று தக்காளி  மூன்று இடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார். இதன் மூலம் இடைத்தரகர்கள் லாபமடைவது தடைக்கப்பட்டு, நுகர்வோருக்கு பொருட்கள் கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் நாட்களில் சில்லரை விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...