மலிவு விலையில் தக்காளி விற்பனையை தொடங்கிவைத்தார் -மத்திய அமைச்சர்

தலைநகர் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக, தேசிய கூட்டுறவு நுகர்வோர் விற்பனை இணையம் வாயிலாக வேன் மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி இன்று  (29.07.2024) தொடங்கிவைத்தார். தில்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ ரூ.60 விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. நாடாளுமன்ற வீதி, மத்திய அரசு அலுவலக வளாகம், லோதி காலனி, ஐடிஓ, ஐஎன்ஏ மார்கெட், மண்டி ஹவுஸ், துவாரகா, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட 18 சில்லரை விற்பனை மையங்களில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரலாத் ஜோஷி, இன்று தக்காளி  மூன்று இடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார். இதன் மூலம் இடைத்தரகர்கள் லாபமடைவது தடைக்கப்பட்டு, நுகர்வோருக்கு பொருட்கள் கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் நாட்களில் சில்லரை விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்