நிர்மலா சீதாராமனுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு

பாதுகாப்புத் துறையின் புதிய அமைச் சராகப் பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமனை, ராணுவ தலைமை தளபதி விபின் ராவத், கடற்படை தலைமைத்தளபதி சுனில் லாம்பா, விமானப்படை தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா ஆகியோர் திங்கள் கிழமை சந்தித்துப்பேசினர்.


தில்லியில் நிர்மலா சீதாரமனின் இல்லத்தில் இந்தச்சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பாதுகாப்புத்துறை எதிர்நோக்கியுள்ள ஒட்டுமொத்த சவால்கள் குறித்தும், அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அமைச்சரிடம் மூன்று தளபதிகளும் எடுத்து ரைத்தனர்.


நாட்டின் முதல் முழுநேர பாதுகாப்புத்துறை அமைச்சராக, நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக் கிழமை பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே, பாதுகாப்புத் துறையைக் கூடுதலாகக் கவனித்துவந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜப்பானில் நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக, ஞாயிற்றுக் கிழமை இரவு, டோக்யோவுக்குப் புறப்பட்டுச்சென்றார். ஜப்பானில் இருந்து அவர் தாயகம்திரும்பிய பிறகு, பாதுகாப்புத் துறையின் பொறுப்பை நிர்மலா சீதாராமன் புதன் கிழமை ஏற்பார் என்று தெரிகிறது.
சர்வதேச நாடுகளின் அரசியல் செயல்பாடுகளும், பிராந்திய அளவின பாதுகாப்பு அம்சங்களும் மாறிவருவதால், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் போர்த்திறனை வலுப்படுத்த வேண்டியது உள்ளிட்ட சவால்களை நிர்மலா சீதாராமன் எதிர்கொள்ளவிருக்கிறார். மேலும், முப்படைகளை நவீனப் படுத்தும் பணியையும் அவர் விரைவுபடுத்த வேண்டியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...