முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் கீரை ஆகிய ஐந்து இலைகளையும் சம அளவாக எடுத்து சுத்தம் செய்து, உலர்த்தி, பொடி செய்து, துணியூட்டுச் செய்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளையும், உணவிற்குப் பின் 5 கிராம் தூளை வாயிலிட்டு, சுடுநீர் குடித்து வர வேண்டும். கண்டிப்பாக சுரம் குறைந்து வீக்கமும் குறையும்.
யானைக்கால் நோய் கண்ட காலில் பப்பாளி பழத்தில் சாறு எடுத்து தடவி வைத்து காலை வெய்யிலில் பட விடவும் காய்ந்தவுடன் கழுவி தொடர்ந்து செய்து வந்தால் யானைக்கால் நோய் தீரும்.
நொச்சி இலை, தும்பை இலை, துளசி இலை, வேப்பிலை, வில்வ இலை போன்ற இலைகளை நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு மூண்று வேளை சுடுநீரில் தேக்கரண்டியளவு உட்கொண்டு வந்தால் குளிர் சுரம் வீக்கம் அனைத்தும் குறையும்.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.