தேச நலன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்:

மஹாராஷ்டிராவில் உள்ள பீமாகோரேகான் விவகாரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் மாவோயிஸ சிந்தனை எழுத்தாளர் வராவரராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி, புகைப்படக் கலைஞர் கிராந்தி, வழக்கறிஞர் சுதா பரத்வராஜ் மற்றும் செய்தியாளர் ஒருவர் உட்பட 5 பேர் செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவை கொன்றது போன்று பிரதமர் மோடியையும் கொல்ல சதிதிட்டம் தீட்டப்பட்டது அம்பலமானது. இது தொடர்பான சோதனைகளில் லேப்-டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்த தகவல்களின் அடிப்படையில் இவர்கள் பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியது அம்பலமானது.

மாவோயிஸ சிந்தனை எழுத்தாளர் வராவர ராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி ஆகியோருக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

இந்தியாவிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு மட்டும்தான் அனுமதி உள்ளது. இதர அனைத்து அமைப்புகளையும் மூடவேண்டியது தான். அந்த அமைப்புகளின் போராளிகளை கைதுசெய்ய வேண்டியதுதான். புதிய இந்தியாவுக்கு வரவேற்கிறேன் என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி அளித்துள்ளார். அதில், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மாவோயிஸ்டுகளால் தான் மிகப் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவோயிஸ்டு அமைப்புக்கு வெளிப்படையாக ஆதரவுதெரிவிக்கிறார். அவர்களுக்காக அனுதாபப் படுகிறார். தேசநலன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...