நாட்டின் அமைதி , வளர்ச்சியை கெடுக்க நினைப்பவர்களுக்கு நம் வீரர்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்

 நேற்று இந்தியாவின் 125 கோடி நாட்டுமக்களும், பராக்கிரம் பர்வ் என்ற வீரத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடினார்கள்.  நாம் 2016ஆம் ஆண்டில் நடந்த துல்லிய தாக்குதல் நினைவு கூரப்பட்டது; நமது தேசத்தின் மீது தீவிரவாத போர்வையில் கோரமாக நடத்தப்பட்ட மறைமுக போருக்கு நமது இராணுவத்தினர் பலமான பதிலடி கொடுத்தார்கள்.  நாட்டின் குடிமக்கள், குறிப்பாக இளைஞர்களுக்கு நமதுசக்தி என்ன என்பதைத் தெரியப்படுத்தும் வகையில், நாட்டில் பல்வேறு இடங்களில் நமது இராணுவத்தினர் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சர்ஜிக்கல் தாக்குதல் நடந்து இரண்டாம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடக்கும், பராக்கிரம பார்வ் நிகழ்ச்சி பெரியவெற்றி பெற்றுள்ளது, இந்த நிகழ்ச்சி, நமது ராணுவத்தின் பெருமிதத்தை இளைஞர்கள் அறிந்துகொள்ள உதவியுள்ளது. 

உலகின் அமைதிக்காக நமது ராணுவம் பணியாற்றி வருகிறது ராணுவ வீரர்களின் துணிச்சலை எண்ணி நாட்டுமக்கள் பெருமை கொள்கின்றனர், பயங்கரவாதிகள் உதவியுடன் நடந்த நிழல் யுத்தத்துக்கு நமதுவீரர்கள் அளித்த பதிலடியாக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து பெருமிதம் கொள்கிறேன். 

அமைதியின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா அமைதிப்பாதையை முன்னெடுத்து செல்லவே விரும்புகிறது. எந்த நாட்டின் நிலப்பரப்பையும் அபகரிக்கும் தீமையான நோக்கமோ, பார்வையோ நமக்குகிடையாது. இதுவே, சமாதானம் மற்றும் அமைதிக்கான இந்தியாவின் தீர்மானமான நிலைப் பாட்டாக உள்ளது.

நமது நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சியை கெடுக்க நினைப்பவர்களுக்கு ராணுவவீரர்கள், எப்போதும் உரிய பதிலடி கொடுப்பார்கள் , பேரிடர் நேரங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் விமானபடை வீரர்கள் முன்னால் வந்து நின்று ஒவ்வொரு முறையும் நாட்டை காத்து வருகிறார்கள் . 

தூய்மையே சேவை திட்டம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது, நாட்டையே மாற்றியுள்ள இந்த திட்டத்தில் பங்கேற்ற அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

காந்தி ஜெயந்தி, இந்தியாவுக்கு முக்கியமான நாளாகும். அவரால் தேசம் ஈர்க்கப் பட்டுள்ளது மகாத்மாவின் கொள்கைகள் இந்தியாவளர உதவுகிறது. நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த காந்தி, சுதந்திரத்திற்காக நடந்த அனைத்து விதமான போராட்டங்களிலும் கலந்துகொண்டார். அவர் மக்களுக்கு முன்னோடியாக இருந்து வந்துள்ளார். அவர் தேசத்துக்கு ஆற்றிய பணியை மக்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். காந்தி அளித்த போதனைகள் இன்றைய காலகட்டத்துக்கும் ஏற்றதாக உள்ளது .

எதற்காகவும் நாட்டின் இறையாண்மையையும், சுயமரியாதையும் விலையாக தரக்கூடிய சமாதானத்தை இந்தியா விரும்பவில்லை என தெரிவித்தார்.

மான் கி பாத்’  நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது.,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...