பட்ஜெட் தொடர்பான பணிகளை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரத்தை  சீர்படுத்தும்  நிலையில், பட்ஜெட் தொடர்பான பணிகளை பிரதமர் மோடியே நேரடியாக கவனிக்க தொடங்கியுள்ளார்.
மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசிவாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு பொதுபட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதிவரை இரண்டு கட்டங்களாக நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை செய்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என தெரிகிறது.

பட்ஜெட் தொடர்பான பணிகளை வழக்கமாக பிரதமர் அலுவலகம் மேற்பார்வையிடுவது வழக்கம். ஆனால், பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் பட்ஜெட் தொடர்பான பணிகளை பிரதமர் மோடியே நேரடியாக கவனித்து வருகிறார். அத்துடன் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பலருடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

மேலும் மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...