யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

 பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை அவதாரங்களில் பேரெழிலும், குணங்களிலும் ஈடுபட்டு மனத்தைப் பரமனிடம் பரி கொடுப்பது பக்தி யோகம். பலன் கருதாது, அறச் செயல்களில் ஈடுபட்டுச் செயல்களின் பலன்களை இறைவனுக்கே அர்ப்பணித்து மனதின் விகாரங்களை நீக்கிக் கொண்டு, மனதை ஆண்டவன் பால் ஈடுபடுத்துவது கர்மயோகம்.

நிலையற்ற வாழ்வு, இறைவன், ஆன்மா என்ற மூன்றின் உண்மையை உணர்ந்து, அவ்வறிவின் திறனால் மனத்தின் அஞ்ஞானத்தை ஒழித்து, ஒளியை உணர்ந்து மனதை அதில் ஒன்றச் செய்வது ஞான யோகம். பிராணாயாமம், ஆசனங்கள் முதலியவற்றால் உடலை வருத்தி, உயிரை உணர்ந்து, மனத்தைக் கட்டுப்படுத்தி, மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை, ஆறு சக்கரங்களின் வழியாக மேல் நோக்கி இயங்கச் செய்வது துரியம் எனப்படும். ஸஹஸ்ராரத்தில் கலந்திருக்கச் செய்வது ஹடயோகம்.

ஆசன சித்தி பெற்று, ஏதேனும் ஒரு மந்திரத்தை ஜெபம் செய்வதால், மனதை அம்மந்திரப் பொருளில் ஈடுபட்டிருக்கச் செய்து, இறையருளைப் பெறுவது மந்திர யோகம்.

இனிப்புப் பொருட்கள் பலவாயினும், அவற்றைச் செய்யப் பயன்படும் பொருள்கள் யாவும் சர்க்கரையும் போல, மனத்தூய்மையும், தியானமும் யோக முறைகள் எல்லாவற்றிற்கும் இன்றியமையாதவையாகும்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...