இந்தியாவுல முதலீடு செய்யுங்கள் … தூண்டில் போடும் !

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றது முதலே உலகின் மற்றநாடுகளுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவுடனும் வர்த்தகப்போர் மூண்டது. இங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இந்திய அரசும் பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு அதிகவரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளும் வர்த்தக ரீதியில் இணைந்து செயல்பட இணங்கிவந்தன. இந்தியாவுடனான வர்த்தகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக ட்ரம்பும் ஒப்புக்கொண்டார். கொரோனா வந்தபிறகு வர்த்தக உறவில் சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில் தற்போது புதிய உத்வேகத்துடன் இருநாடுகளும் வர்த்தக உறவைப் புதுப்பிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும், இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து முதலீடுசெய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆண்டில்மட்டும் கூகுள், அமேசான் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் 20 பில்லியன் டாலருக்குமேல் முதலீடு செய்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா பிரச்சினை குறித்துப்பேசிய மோடி, கொரோனா என்ற கொடியநோய் வந்தபிறகு உலக நாடுகள் சர்வதேசளவில் விநியோகச் சங்கிலியை எவ்வாறு கையாளவேண்டும் என்று கற்றுத் தந்துள்ளதாகவும், மதிப்பு மட்டுமல்லாமல் நம்பிக்கை சார்ந்தும் வர்த்தகம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச முதலீட்டுக்கான அனைத்து அம்சங்களும் இந்தியாவில் கொட்டிகிடப்பதாகக் கூறியுள்ள மோடி, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வந்து அதிகமாக முதலீடுசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்கா மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளும், ஆஸ்திரேலியா – ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாமீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தயங்காமல் முதலீடு செய்வதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா மூலோபாய தொழில் மாநாட்டில் வீடியோ கான்பெரன்ஸ் வாயிலாகப் பங்கேற்ற மோடி, இவ்வாறு பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...