இந்தியாவுல முதலீடு செய்யுங்கள் … தூண்டில் போடும் !

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றது முதலே உலகின் மற்றநாடுகளுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவுடனும் வர்த்தகப்போர் மூண்டது. இங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இந்திய அரசும் பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு அதிகவரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளும் வர்த்தக ரீதியில் இணைந்து செயல்பட இணங்கிவந்தன. இந்தியாவுடனான வர்த்தகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக ட்ரம்பும் ஒப்புக்கொண்டார். கொரோனா வந்தபிறகு வர்த்தக உறவில் சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில் தற்போது புதிய உத்வேகத்துடன் இருநாடுகளும் வர்த்தக உறவைப் புதுப்பிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும், இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து முதலீடுசெய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆண்டில்மட்டும் கூகுள், அமேசான் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் 20 பில்லியன் டாலருக்குமேல் முதலீடு செய்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா பிரச்சினை குறித்துப்பேசிய மோடி, கொரோனா என்ற கொடியநோய் வந்தபிறகு உலக நாடுகள் சர்வதேசளவில் விநியோகச் சங்கிலியை எவ்வாறு கையாளவேண்டும் என்று கற்றுத் தந்துள்ளதாகவும், மதிப்பு மட்டுமல்லாமல் நம்பிக்கை சார்ந்தும் வர்த்தகம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச முதலீட்டுக்கான அனைத்து அம்சங்களும் இந்தியாவில் கொட்டிகிடப்பதாகக் கூறியுள்ள மோடி, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வந்து அதிகமாக முதலீடுசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்கா மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளும், ஆஸ்திரேலியா – ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாமீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தயங்காமல் முதலீடு செய்வதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா மூலோபாய தொழில் மாநாட்டில் வீடியோ கான்பெரன்ஸ் வாயிலாகப் பங்கேற்ற மோடி, இவ்வாறு பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...