இந்தியா சிறந்த பிரதமரை பெற்றுள்ளது பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி, சிறந்த நண்பர் என்று பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
2017 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப் பேற்றுள்ளார். அவர் அதிபராக பதவியேற்றதில் இருந்தே, உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம், வரிவிதிப்பு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடுகடத்தல் என ஒவ்வொரு விஷயத்திலும் அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில், இந்திய பொருட்களுக்கு அதிகவரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அடிபர் அண்மையின் எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க பொருட்களுக்கான வரியை இந்தியா குறைக்கா விட்டால் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையின் கீழ் இந்தியபொருட்களுக்கு அதிகளவு வரி விதிக்கப்படும் என அவர் கூறினார். ஏப்ரல் 2-ந் தேதி முதல் இந்திய பொருட்கள்மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதிக்கும் என அவர் அறிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளைமாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் பேசினார்.
அப்போது , இந்தியாவுடனான உறவுகுறித்தும், வரி தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு டொனால்ட் ட்ரம்ப் பதிலளிக்கையில், ‘வரிதொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நல்லமுறையில் நடந்தது. பிரதமர் மோடி சமீபத்தில் இங்குவந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம். உலகிலேயே அதிகவரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
பிரதமர் மோடிமிகவும் புத்திசாலி. என்னுடைய நல்லநண்பரும் கூட. நாங்கள் இது தொடர்பாக பேசினோம். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அனைத்தும் நல்லமுறையில் நடக்கும் என்று நினைக்கிறேன். சிறந்த பிரதமரை இந்தியா பெற்றுள்ளது.’ இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |