வேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும்

பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, லாபகரமான, நீடித்த பயன்தரக்கூடிய விவசாய முறைகளை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார் . அதேசமயத்தில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதையும், பலமில்லியன் பேருக்கு உணவு மற்றும் சத்துகள் கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியவர், பருவநிலை மாறுதலை தாக்குபிடிக்கக்கூடிய பயிர் ரகங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வறட்சி, வெள்ளம், வெப்பம், உப்புத்தன்மை, பூச்சிகள், நோய்களை தாங்கும்வகையில் அவை இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைப்பு செய்துகொள்ளும் பயிர்களை உருவாக்கினால்தான், இந்திய வேளாண்மையின் தாக்குபிடிக்கும் திறன் அதிகரித்து, நீடித்த வளர்ச்சி பெறுவதாக இருக்கும் என்றார் அவர்.

வேளாண்மை மற்றும் உணவுதுறையில் வரும் தசாப்தங்களில் பருவநிலை மாறுதலால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்த  நாயுடு, சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சூழலைக்குறைக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை உருவாக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிலத்தடி நீர்மட்டம் குறைவது, நீர்நிலைகளில் மாசுஅதிகரித்தல் ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகள்பற்றி கவலை தெரிவித்தவர், பருவநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய, வறட்சியைத் தாங்கக் கூடிய மரபணு மாற்றம் செய்தபயிர்களும், தண்ணீரை சேமிக்கும் தொழில்நுட்பங்களும் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

வேளாண்மை துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும் உள்ளது. விவசாயம்தான் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது என்று கூறியவர், நமது கலாச்சாரம், நாகரிகத்தில் பிணைந்த அம்சமாக விவசாயம் இருக்கிறது என்று குறிப்பிட்டார். “நமது மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வாதாரத்துக்கு இன்னும் விவசாயத்தைதான் சார்ந்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

“விவசாயிகளின் வருமானத்தைப்பெருக்க, நாம் உற்பத்தியைப் பெருக்கவும், வளங்களை சிறப்பாக பயன்படுத்தவும், சாகுபடி எண்ணிக்கையை அதிகரிக்கவும், உயர்மதிப்பு பயிர்கள் சாகுபடி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் யோசனை தெரிவித்தார். விவசாயிகளுக்கு லாபகரமான விலைகள் கிடைப்பதை தொடர்புடைய துறையினர் உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நல்ல சேமிப்பு மற்றும் பதப்படுத்தல் வசதிகள் செய்துதருதல், இடுபொருள்கள் கிடைக்கச்செய்தல், கடன் வசதி அளித்தல், சந்தைப்படுத்தலுக்கு நல்ல ஏற்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால்தான் இது சாத்தியம் என்றார் அவர்.

பெருந்தொற்று காலத்தில் இணையற்ற, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செயல்பாடுகளுக்காக விவசாயிகளைப் புகழ்ந்த  நாயுடு, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சவால்களையும் மீறி விவசாய துறைதான் சிறப்பாக செயல்பட்டது என்று கூறினார். காரிப்பருவத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விளைச்சல்பரப்பு 59 லட்சம் ஹெக்டர் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். முடக்கநிலை காலத்திலும் விதைகள், உரங்கள், கடன்வசதி ஆகியவை உரியகாலத்தில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ததே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

சமீப ஆண்டுகளில் வேளாண்மை துறைக்குப் புத்துயிரூட்ட அரசு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தவர், கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்து, விவசாயியின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் இப்போது கவனம் செலுத்தப்படுவதாகக் கூறினார். பிரதமரின் கிசான்சம்மான் நிதித்திட்டத்தை அமல் செய்ததால், இந்திய விவசாயிகளில் 72 சதவீதம் பேர் பயன்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

CRISPR-Cas9 மரபணு மாற்றுதல் போன்ற புதியதொழில் நுட்பங்களின் பயன்களைக் குறிப்பிட்ட  நாயுடு, தேவைகளுக்கு ஏற்ப இயந்திரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார். “மேம்படுத்தப்பட்ட கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி 30 சதவீதளவுக்கு அதிகரிக்கும், சாகுபடிசெலவு 20 சதவீதம்வரை குறையும்” என்றார் அவர்.

நீர் மேலாண்மை, வேளாண்மை மற்றும் அதைச்சார்ந்த துறைகளில் தமிழகத்தின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், உற்பத்தியை அதிகரிப்பதற்கு புதிய உயர்விளைச்சல் ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொள்வதில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மைக் கழகத்தில் பட்டம்பெற்று செல்பவர்கள், தொழில்நுட்பம் சார்ந்த நீடித்த பயன்தரக்கூடிய வேளாண்மை மேம்பாட்டை உருவாக்கி, விவசாயிகளுக்கு நல்லவருமானம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். நாட்டின் பலமில்லியன் பேருக்கு உணவு, சத்து ஆகியவை போதிய அளவுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். “உங்களுடைய ஆராய்ச்சி சமூகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். பருவநிலை மாறுதல், ஆரோக்கிய பிரச்சினைகள் என மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...