கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

 மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது உண்டு. துவையல் செய்தும் உண்ணலாம். இருதயத்துக்கு நல்லது. தலையையும், மூளையையும் பற்றிய சூட்டை மாற்றும். ஜீரணம் உண்டாகும். குளிர்ந்த தேகத்தோருக்கு உதவாது. பித்தம் போக்கியாகவும், உடல் பலம், தாது பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கொத்துமல்லிக் கீரையுடன் சம அளவு துவரம் பருப்பைச் சேர்த்து பக்குவப்படுத்தி 40 நாட்கள் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவடையும்.

கொத்துமல்லி இலை, சரக்கொன்றை இலை, புளி இவற்றை ஒன்றுகூட்டி தண்ணீர்விட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை வீக்கம் குணமாகும்.

கொத்துமல்லிக் கீரையை ஆய்ந்து அத்துடன் தேவையான அளவு பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்துத் துவையல் அரைத்து அதைக் கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து நல்லெண்ணெயில் தாளித்து தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் தணியும்.

தேகத்தில் எங்காவது சுரசுரப்பு காணப்பட்டால் கொத்துமல்லிச்சாற்றை அந்தப் பகுதியில் காலையில் பூசி மாலையில் கழுவி விட வேண்டும். இவ்விதம் 7 நாட்கள் செய்துவர சுரசுரப்பு மாறி தோல் வழுவழுப்பாகும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...