இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்று தாத்தா நேருவிடம்தான் ராகுல் கேட்க வேண்டும்

இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக் கொடுத்தது யார் என்று தாத்தா நேருவிடம்தான் ராகுல் கேட்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் கிஷன்ரெட்டி கூறியுள்ளார்.

பான்காங் ஏரி அருகே பிங்கர் 4 பகுதியில் இருந்து நமது ராணுவம் விலக்கி கொள்ளபட்டது ஏன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு லடாக் எல்லையில் உள்ள நிலவரம்தொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். இப்போது, நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார். பிங்கர்-4 பகுதி நமது மலைப்பகுதி. இப்போது, அந்த பிங்கர்-4 பகுதியில்இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பகுதியை சீனருக்கு ஏன் மோடி கொடுத்தார்? இந்த இடங்களில் இருந்து ராணுவம் விலக்கிகொண்டது ஏன்?

எல்லைகளை காக்க நமது ராணுவம், விமானப்படை, கடற்படை தயாராக உள்ளது. இந்திய படைகள் கைப்பற்றிய பகுதியை, சீனாவிற்கு பிரதமர் கொடுத்துவிட்டார். ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் பிரச்சனை நிலவிவருகிறது. தற்போது வரை சீனாவுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துவருகிறது. சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார். சீனாவுக்கு பணிந்து செல்கிறார். சீனாவிற்கு ஆதரவாகசெயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார் என ராகுல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், முக்கிய மலைஉச்சியை சீனாவிடம் இந்தியா விட்டுக் கொடுத்துவிட்டதாக ராகுல் கூறியதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இந்தியபகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்று தாத்தா நேருவிடம்தான் ராகுல் கேட்க வேண்டும். யார் தேசபக்தர், யார் தேச பக்தர் இல்லை என்பது மக்களுக்கு நன்றாகதெரியும் என மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...