இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்று தாத்தா நேருவிடம்தான் ராகுல் கேட்க வேண்டும்

இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக் கொடுத்தது யார் என்று தாத்தா நேருவிடம்தான் ராகுல் கேட்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் கிஷன்ரெட்டி கூறியுள்ளார்.

பான்காங் ஏரி அருகே பிங்கர் 4 பகுதியில் இருந்து நமது ராணுவம் விலக்கி கொள்ளபட்டது ஏன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு லடாக் எல்லையில் உள்ள நிலவரம்தொடர்பாக நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். இப்போது, நமது படைகள் பிங்கர்-3 மலைப்பகுதிக்கு செல்வதாக அவர் கூறினார். பிங்கர்-4 பகுதி நமது மலைப்பகுதி. இப்போது, அந்த பிங்கர்-4 பகுதியில்இருந்து பிங்கர்-3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளன. நமது பகுதியை சீனருக்கு ஏன் மோடி கொடுத்தார்? இந்த இடங்களில் இருந்து ராணுவம் விலக்கிகொண்டது ஏன்?

எல்லைகளை காக்க நமது ராணுவம், விமானப்படை, கடற்படை தயாராக உள்ளது. இந்திய படைகள் கைப்பற்றிய பகுதியை, சீனாவிற்கு பிரதமர் கொடுத்துவிட்டார். ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் பிரச்சனை நிலவிவருகிறது. தற்போது வரை சீனாவுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துவருகிறது. சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார். சீனாவுக்கு பணிந்து செல்கிறார். சீனாவிற்கு ஆதரவாகசெயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார் என ராகுல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், முக்கிய மலைஉச்சியை சீனாவிடம் இந்தியா விட்டுக் கொடுத்துவிட்டதாக ராகுல் கூறியதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இந்தியபகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்று தாத்தா நேருவிடம்தான் ராகுல் கேட்க வேண்டும். யார் தேசபக்தர், யார் தேச பக்தர் இல்லை என்பது மக்களுக்கு நன்றாகதெரியும் என மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...