உலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்

அகமதாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானம் இதற்கு முன்னர் சர்தார்பட்டேல் மைதானம் என்றே கூறப்பட்டு வந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 3 ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன்ப மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி மைதானம் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மைதானத்தை திறந்து வைத்தார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனிருந்தார்.

பின்னர் பேசிய ராம்நாத் கோவிந்த் : “இந்த கிரிக்கெட் மைதானம் பாரதபிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராகவும் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்தபோது புது மைதானத்திற்கான கட்டுமானபணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது” என்று கூறினார். அவருக்கு பின்பு உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ” இந்த கிரிக்கெட் மைதானம் நரேந்திர மோடியின் நெடுநாள் கனவு திட்டம். எனவே அவரது பெயரை வைக்க முடிவு செய்தோம். அதே சமயம் மாண்புமிகு வல்லபாய்படேல் அவர்களின் பெயர் புறக்கணிக்கப்பட கூடாது என்பதற்காகவே மைதானத்தின் உள்விளையாட்டு வளாகத்துக்கு அவரது பெயரை வைத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

வழக்கமாக தேசிய தலைவர்கள் இறந்தபின்பு அவர்களது பெயர்கள் அரங்குகளுக்கு சூட்டப்படுவது வழக்கமாகும். ஆனால், இது கிரிக்கெட்டில் அப்டியே உல்டாவாக காலகாலமாக நடந்துவருகின்றது. மும்பையின் பிராபோர்ன் மற்றும் வான்கடே ஸ்டேடியங்களின் பெயர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் உயிருடன் இருந்தகாலத்திலேயே அவர்களது பெயர்கள் மைதானங்களுக்கு பெயிரிடப்பட்து.

நவி மும்பையின் டி ஒய் பாட்டீல் ஸ்டேடியம், பெங்களூரூ எம் சின்னசாமி ஸ்டேடியம், மொஹாலி ஐ.எஸ்.பிந்த்ரா ஸ்டேடியம் மற்றும் நமதுசென்னையின் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் இவை அனைத்திற்கும் இதேபோல சம்பந்தப்பட்ட நபர்கள் இருந்தபோதே அவர்களது பெயர்கள் மைதானங்களுக்கு பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...