ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

 அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடி ஊமத்தை. இதில் அரிதாகக் கிடைக்கும் கரு ஊமத்தையே மருத்துவக் குணம் மிக்கதாக உள்ளது. பொதுவாக நோய்த் தணிக்கவும், சிறப்பாக இசிவு நோய்த் தணிக்கவும் செயல்படுகிறது.

வெள்ளை பூ பூக்கும் ஊமத்தைச் சாதாரணமாய் எங்கும் கிடைக்கும். இது தவிர கரு ஊமத்தை, பொன்னூமத்தை, அடுக்கு ஊமத்தை, மருஊமத்தை என்ற வகைகளும் உண்டு.

 

இதன் சமூலத்தை அரைத்து நாய்க்கடிப்புண், ஆறாத குளிப்புண், தோல் கட்டிகள், நஞ்சு, திரிதோடம் ஆகியவைகளைப் போக்கும்.

 

இதன் இலையை உலர்த்தி பொடி செய்து ½ (or) 1½ குன்றிமணியளவு உள்ளுக்குக் கொடுக்க சுவாச காசம் நீங்கும்.

 

இலையை வதக்கி ஒற்றடமிடக் கீல்வாதம்,  எலும்பு வீக்கம், வித்திருதி கட்டிகளினால் உண்டாகும் வேதனையும், பால் கட்டிக் கொள்வதால் உண்டாகும் வேதனையும் நீங்கும்.

 

இலை, அரிசிமாவு இரண்டையும் சமமாக எடுத்துக் கொஞ்சம் நீர் விட்டரைத்து களிபதமாய் வேகவைத்து, எலும்பு மூட்டு இவ்விடங்களில் உண்டாகும் வீக்கம். இதனால் வேதனைத் தரும் கட்டிகள் வெளிமூலம் இவைகளுக்குப் பற்றிட குணமாகும். ஆனால் புண், காயம் இவைகளுக்குப் போடக் கூடாது. நரம்புச் சிலந்திக்கு இதை உபயோகிக்கலாம். இலை அல்லது பூ 75 கிராம் எடுத்து இடித்து 1 லிட்டர் நீருடன் சேர்த்துக் காய்ச்சி மேற்கண்ட நோய்களுக்கு ஒற்றடமிடலாம்.

 

கரும்பு வெல்லத்தில் இலையின் சாறு, பூவின்சாறு 1:3 துளி உள்ளுக்குக் கொடுத்து பால் சோறு, மோர் சோறு ஆகாரமாகக் கொள்ள பேய் நாய்க்கடி விஷம் தீரும். 3 நாட்கள் கொடுத்தால் போதும். உப்பு, புளி நீக்கி பத்தியம் இருக்க வேண்டும். தயிரில் இதன் சாறு 5 முதல் 10 துளி சேர்த்துக் கொடுக்க பிரமேகம் தணியும். இலை ரசத்தை 1 (or) 2 துளி காதில்விடக் காது கடுவழித் தீரும். வீக்கம் உள்ள இடங்களில் தடவலாம்.

 

ஊமத்தை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் காதில் விடச் சீதளத்தால் வந்த காதுவலி நீர்ந்து குணமாகும்.

ஊமத்தை இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி தூள் செய்து (ஒன்றிரண்டாய்) சுருட்டாய் செய்து புகைப்பிடிக்க ஆஷ்துமா, மூச்சுத்திணறல் உடனே குணமாகும்.

இலையை நல்லெண்ணெயில் வதக்கிக்கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் வாயுக்கட்டிகள், அண்டவாயு, தாய்ப்பால் கட்டிக் கொண்டு வலித்தல் ஆகியவை தீர்ந்து குணமாகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...