ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

 அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடி ஊமத்தை. இதில் அரிதாகக் கிடைக்கும் கரு ஊமத்தையே மருத்துவக் குணம் மிக்கதாக உள்ளது. பொதுவாக நோய்த் தணிக்கவும், சிறப்பாக இசிவு நோய்த் தணிக்கவும் செயல்படுகிறது.

வெள்ளை பூ பூக்கும் ஊமத்தைச் சாதாரணமாய் எங்கும் கிடைக்கும். இது தவிர கரு ஊமத்தை, பொன்னூமத்தை, அடுக்கு ஊமத்தை, மருஊமத்தை என்ற வகைகளும் உண்டு.

 

இதன் சமூலத்தை அரைத்து நாய்க்கடிப்புண், ஆறாத குளிப்புண், தோல் கட்டிகள், நஞ்சு, திரிதோடம் ஆகியவைகளைப் போக்கும்.

 

இதன் இலையை உலர்த்தி பொடி செய்து ½ (or) 1½ குன்றிமணியளவு உள்ளுக்குக் கொடுக்க சுவாச காசம் நீங்கும்.

 

இலையை வதக்கி ஒற்றடமிடக் கீல்வாதம்,  எலும்பு வீக்கம், வித்திருதி கட்டிகளினால் உண்டாகும் வேதனையும், பால் கட்டிக் கொள்வதால் உண்டாகும் வேதனையும் நீங்கும்.

 

இலை, அரிசிமாவு இரண்டையும் சமமாக எடுத்துக் கொஞ்சம் நீர் விட்டரைத்து களிபதமாய் வேகவைத்து, எலும்பு மூட்டு இவ்விடங்களில் உண்டாகும் வீக்கம். இதனால் வேதனைத் தரும் கட்டிகள் வெளிமூலம் இவைகளுக்குப் பற்றிட குணமாகும். ஆனால் புண், காயம் இவைகளுக்குப் போடக் கூடாது. நரம்புச் சிலந்திக்கு இதை உபயோகிக்கலாம். இலை அல்லது பூ 75 கிராம் எடுத்து இடித்து 1 லிட்டர் நீருடன் சேர்த்துக் காய்ச்சி மேற்கண்ட நோய்களுக்கு ஒற்றடமிடலாம்.

 

கரும்பு வெல்லத்தில் இலையின் சாறு, பூவின்சாறு 1:3 துளி உள்ளுக்குக் கொடுத்து பால் சோறு, மோர் சோறு ஆகாரமாகக் கொள்ள பேய் நாய்க்கடி விஷம் தீரும். 3 நாட்கள் கொடுத்தால் போதும். உப்பு, புளி நீக்கி பத்தியம் இருக்க வேண்டும். தயிரில் இதன் சாறு 5 முதல் 10 துளி சேர்த்துக் கொடுக்க பிரமேகம் தணியும். இலை ரசத்தை 1 (or) 2 துளி காதில்விடக் காது கடுவழித் தீரும். வீக்கம் உள்ள இடங்களில் தடவலாம்.

 

ஊமத்தை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் காதில் விடச் சீதளத்தால் வந்த காதுவலி நீர்ந்து குணமாகும்.

ஊமத்தை இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி தூள் செய்து (ஒன்றிரண்டாய்) சுருட்டாய் செய்து புகைப்பிடிக்க ஆஷ்துமா, மூச்சுத்திணறல் உடனே குணமாகும்.

இலையை நல்லெண்ணெயில் வதக்கிக்கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் வாயுக்கட்டிகள், அண்டவாயு, தாய்ப்பால் கட்டிக் கொண்டு வலித்தல் ஆகியவை தீர்ந்து குணமாகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...