எதிர்கட்சிகள் நம்பிக்கை யில்லாதவை

சமூகநீதியை காப்பதுபோல் எதிர் கட்சிகள் நாடகம் ஆடுகின்றன. ஆனால் பா.ஜ.க.,தான் இந்த நாட்டின் பலதரப்பு மக்களின் வாழ்வை உயர்த்த பாடுபடுகிறது” என பா.ஜ., தினத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

பா.ஜ., நிறுவன தினத்தை யொட்டி இன்று (ஏப்.06) கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி வீடியோகான்பரன்சிங் மூலம் உரையாற்றுகையில் அவர் மேலும் பேசிய தாவது:

இந்நாள் சிறப்பாக கொண்டாடப் பட வேண்டிய நாள். ஹனுமன் ஜெயந்தி கொண்டாடும் நாளில் இப்போது இருக்கிறோம். ஹனுமன் ஒருதியாகி. இது போல் நாமும் இந்த நாட்டிற்கு உழைக்கவேண்டும். ஹனுமன் போல் பா.ஜ., உழைக்கிறது. இந்தியா இப்போது எந்தவொரு சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. 2014 முதல் இந்தியா புதியஉத்வேகத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது. அரசியல் கலாசாரத்தை மாற்றியது பா.ஜ., ஜனநாயக கொள்கைகளை பலப்படுத்த பா.ஜ., பாடுபட்டு வருகிறது.

இந்த தேசத்தின் வளர்ச்சியே பா.ஜ.,வின் தாரகமந்திரம். அனைத்து விஷயங்களிலும் உயர்ந்தது இந்த நாடுதான். தேசத்தின் வளர்ச்சியே எங்களின் முக்கிய நோக்கம். ஓட்டு வங்கி அரசியலை பா.ஜ.,விரும்புவ தில்லை. சமூகநீதியே எங்களுக்கு முக்கியம். எதிர்கட்சிகள் சமூகநீதியை காப்பது போல் நாடகம் ஆடுகிறது. பெண்கள் அதிகாரத்திற்கு பா.ஜ., வழிவகுக்கிறது. காங்கிரஸ்கட்சி வாரிசு அரசியல் , இன வேறுபாடு வளர்த்தல் என்பதை பின்பற்றி வருகிறது. ஏழைகளையும், மலைவாழ் மக்களையும் காங்கிரஸ் இழிவாக பார்க்கிறது.

எதிர்கட்சிகள் நம்பிக்கை யில்லாதவை. அக்கட்சிகளால் யாருக்கும் பயன் கிடைக்காது.என்னை வீழ்த்த எதிர் கட்சிகள் பொய்சொல்கிறது. பா.ஜ., குறித்து தவறான பிரசாரத்தை எதிர் கட்சிகள் செய்து வருகின்றன .என்னை குழிதோண்டி புதைப்பதையே எதிர்ட்சிகள் சிந்தித்து வருகின்றன. ஆனால் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர் கட்சிகளின் சதியும் , பொய் பிரசாரமும் எடுபடாது.

காஷ்மீரின் அமைதி குறித்து கடந்தகால ஆட்சியாளர்கள் கவலைப்பட வில்லை. காஷ்மீரின் சிறப்புஅந்தஸ்து ரத்து, 370 வது சட்ட பிரிவு குறித்து எதிர் கட்சியினர் தவறான பிரசாரம் செய்தனர். ஏழைகளுக்கு கழிப்பறை , இலவச வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். 80 கோடி பேருக்கு இலவச ரேசன்பொருட்கள் கொடுத்துள்ளோம். இதுதான் சமூகநீதி. நாம் அனைத்து இந்தியர்களின் இதயங்களை வெல்லவேண்டும். இதற்கு பா.ஜ, காரிய தரிசிகள் பாடுபட வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...