தாய்மார்கள் சகோதரிகளின் ஆசி பிரதமர் மோடி பெருமிதம்

‘தாய்மார்கள், சகோதரிகளின் ஆசீர்வாதங்கள் எனக்கு வந்து கொண்டே இருப்பதால், நான் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறேன்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத் மாவட்டம் நவ்சாரியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு பெண்ணுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெண்களிடமிருந்து உத்வேகங்களைப் பெறுவது நமக்கு முக்கியம்.

எங்கள் அரசு பெண்களுக்காக பாடுபடுகிறது. ஆயிரக்கணக்கான கழிப்பறைகளைக் கட்டி பெண்களுக்கு கண்ணியத்தை அளித்தோம். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிப் பாதையில் இந்தியா பயணிக்கிறது. புதிய பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மசோதா பெண்களை வலுப்படுத்துவதாகும். இது சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கான எனது அர்ப்பணிப்பு. ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஜனாதிபதியாக இருக்கிறார்.

இன்று பெண்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டிய நாள். நான் உலகின் மிகப் பெரிய பணக்காரன் என்று பெருமையுடன் சொல்ல முடியும். எனக்கு கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசீர்வாதங்கள் உள்ளன. இந்த ஆசீர்வாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதனால் தான் நான் உலகின் மிகப் பெரிய செல்வந்தராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துருப்பிடித்த இரும்புக்கரத்தை ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார் நாகேந்திரன் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும் ...

நிமிடங்களில் பாக், விமானப்படை த ...

நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம் சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரத ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் வி� ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிடம் திரும்பும் நாள் வெகு ...

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்� ...

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு அதிவேகமாக செயல்பட்டு ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...