பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு

பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா சேவை இல்லை; விரைவில் துவங்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், இன்று (ஜன.,17) அமெரிக்காவின் துணை தூதரகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி மற்றும் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: பெங்களூரு ஒரு முக்கியமான இடம். இங்கு அமெரிக்கா தூதரகம் வேண்டும் என எரிக் கார்செட்டியிடம் கோரிக்கை விடுத்து இருந்தேன். தற்போது தூதரகம் திறக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நமது தூதரகம் திறக்கப்பட உள்ளது, என்றார்.

நிகழ்ச்சியில் அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி பேசியதாவது: பெங்களூருவில் துணை தூதரகம் அமைக்க வேண்டும் என்பது ஜெய்சங்கரின் எண்ணம். இந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. விசா சேவைகள் உடனடியாக வழங்கப்படாது, ஆனால் விரைவில் விசா சேவை துவங்கும்.

எல்லோரும் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். நாங்கள் அதிக சுற்றுலாப் பயணிகளையும், மாணவர்கள் வருகையை பார்க்க விரும்புகிறோம். விரைவில் விசா சேவையை கொண்டு வர முயற்சிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.