இயற்கையான வாழ்வு சில நியதிகள்

 பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது.

உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும்.

மதிய உணவுக்கு முன்போ, பின்போ அரைமணி நேரம் நடக்க வேண்டும்.

உண்பதற்கு அரைமணிக்கு முன்பும், உண்டபின் ஒரு மணி நேரம் கழித்தும் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவின் இடையிடையே தண்ணீர் குடிக்கவே கூடாது.

இயற்கையின் சூரியஒளி தரும் வைட்டமின் 'டி' யைப் பெற தினமும் காலையில் சூரியஒளி முன்பு நில்லுங்கள்.

படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்ததும் இரண்டு அல்லது மூன்று டம்ளர்கள் தண்ணீர் பருகவும். பின்பு நாள் முழுக்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவும்.

தினமும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

தினமும் காலையில் குறைந்தது முக்கால் மணி நேரமாவது சுறுசுறுப்பாக நடக்க வேண்டும்.

ஆறுமணி நேர இடைவெளி விட்டே சாப்பிட வேண்டும்.

உணவை அவசர அவசரமாகச் சாப்பிடக் கூடாது. மென்று சுவைத்துச் சாப்பிட வேண்டும்.

உண்ணும் முன்பு கைகளைக் கழுவ வேண்டும். கழிவறை சென்று வந்தபின் சோப்பு நீரில் கைகளைக் கழுவுவது நல்லது.

நிமிர்ந்து உட்கார்ந்து பணி செய்ய வேண்டும்.

கொழுப்பு எண்ணையைத் தவிர்க்கவும்.

நீராவியில் வேகவைக்க வேண்டும். அரைவேக்காடாக வெந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.

தினமும் ஒன்றிரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும்.

வாரம் ஒருமுறை பட்டினி.

காலந் தாழ்த்திய உணவையும், தூக்கத்தையும் தவிர்க்க.

வெந்த உணவோடு, வேகாத உணவையும் சேர்த்து உண்ணலாகாது.
பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவையாவது ஒரு நாள் முழுக்க சமைக்காத உணவை – பழங்கள், காய்கறிகளை உண்க.

மலச்சிக்கலுக்கு எனிமா எடுத்துக் கொள்க.

சூரிய ஒளி, வெளிச்சமுள்ள வசிப்பிடம் வேண்டும்.
உடற்பயிற்சி, யோகா செய்க. கூடவே போதிய ஓய்வும் தேவை.
உங்கள் உடலின் குணமாக்கும் சக்தியை நம்புங்கள்.
போதைப் பொருட்களைத் தவிர்த்து மனதில் உறுதியாக இருங்கள்.

நன்றி : நோய்களும் இயற்கை மருத்துவமும்
டாக்டர் க. திருத்தணிகாசலம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...