இயற்கையான வாழ்வு சில நியதிகள்

 பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது.

உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும்.

மதிய உணவுக்கு முன்போ, பின்போ அரைமணி நேரம் நடக்க வேண்டும்.

உண்பதற்கு அரைமணிக்கு முன்பும், உண்டபின் ஒரு மணி நேரம் கழித்தும் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவின் இடையிடையே தண்ணீர் குடிக்கவே கூடாது.

இயற்கையின் சூரியஒளி தரும் வைட்டமின் 'டி' யைப் பெற தினமும் காலையில் சூரியஒளி முன்பு நில்லுங்கள்.

படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்ததும் இரண்டு அல்லது மூன்று டம்ளர்கள் தண்ணீர் பருகவும். பின்பு நாள் முழுக்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவும்.

தினமும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

தினமும் காலையில் குறைந்தது முக்கால் மணி நேரமாவது சுறுசுறுப்பாக நடக்க வேண்டும்.

ஆறுமணி நேர இடைவெளி விட்டே சாப்பிட வேண்டும்.

உணவை அவசர அவசரமாகச் சாப்பிடக் கூடாது. மென்று சுவைத்துச் சாப்பிட வேண்டும்.

உண்ணும் முன்பு கைகளைக் கழுவ வேண்டும். கழிவறை சென்று வந்தபின் சோப்பு நீரில் கைகளைக் கழுவுவது நல்லது.

நிமிர்ந்து உட்கார்ந்து பணி செய்ய வேண்டும்.

கொழுப்பு எண்ணையைத் தவிர்க்கவும்.

நீராவியில் வேகவைக்க வேண்டும். அரைவேக்காடாக வெந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.

தினமும் ஒன்றிரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும்.

வாரம் ஒருமுறை பட்டினி.

காலந் தாழ்த்திய உணவையும், தூக்கத்தையும் தவிர்க்க.

வெந்த உணவோடு, வேகாத உணவையும் சேர்த்து உண்ணலாகாது.
பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவையாவது ஒரு நாள் முழுக்க சமைக்காத உணவை – பழங்கள், காய்கறிகளை உண்க.

மலச்சிக்கலுக்கு எனிமா எடுத்துக் கொள்க.

சூரிய ஒளி, வெளிச்சமுள்ள வசிப்பிடம் வேண்டும்.
உடற்பயிற்சி, யோகா செய்க. கூடவே போதிய ஓய்வும் தேவை.
உங்கள் உடலின் குணமாக்கும் சக்தியை நம்புங்கள்.
போதைப் பொருட்களைத் தவிர்த்து மனதில் உறுதியாக இருங்கள்.

நன்றி : நோய்களும் இயற்கை மருத்துவமும்
டாக்டர் க. திருத்தணிகாசலம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...