பிரதமரும். சட்ட அமைச்சரும் தங்கள்பதவியை ராஜினாமா செய்யவேண்டும்

 சி.பி.ஐ., எடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையிடு இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் வேளையில் இன்று அவைகள் சி.பி.ஐ., டைரக்டர் மூலமே வெளியாகியிருப்பதால் பிரதமரும். சட்ட அமைச்சரும் தங்கள்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என பா.ஜ.க, மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் சிபிஐ., கடந்த சிலநாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு விவரஅறிக்கை தாக்கல்செய்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தங்கள் தரப்பு விவரத்தை அபிடவிட்டாக தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் சிபிஐ., டைரக்டர் ரஞ்சித்சின்கா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் எங்களின் அறிக்கைவிவரம் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இதனை அவர் பார்த்தார் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க., செய்திதொடர்பாளர் பிரதாப்ரூடி கூறியதாவது: நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சி.பி.ஐ., அதிகாரத்தில், மத்திய அரசு தலையிட்டுவருகிறது என கூறிவருகிறோம். இது இப்போது நிரூபணமாகி விட்டது . பிரதமரை காப்பாற்ற முயற்சிநடந்துள்ளது. எனவே சட்டஅமைச்சர் அஸ்வனி குமாரும், பிரதமரும் பதவி விலகவேண்டும். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...