அவதூறாக வழக்கு ஆசம்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை

யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள்குறித்து அவதூறாக பேசியவழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம்கானுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 பொதுத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஞ்சநேய குமார் ஆகியோருக்கு எதிராக ஆசம்கான் அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு பதியப்பட்டது. வழக்கை விசாரித்த ராம்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், இருதரப்புக்கு இடையே மோதலை உண்டு பண்ணும் நோக்கில் ஆசம்கான் பேசியது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், எனவே, அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக உத்தரவிட்டார். எனினும், இந்த வழக்கில் ஆசம் கான் ஜாமீன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசம் கானின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பறிக்கவாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஆசம்கான் தெரிவித்துள்ளார். தான் நம்பிக்கை இழக்கவில்லை என்றும், அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டதாக தான் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியில், அதன் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அடுத்ததலைவராக ஆசம் கான் பார்க்கப்படுகிறார். ராம்பூர் மாவட்டத்திலும், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களிலும் ஆசம் கான் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து வருகிறார். 2017ல் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அவர் மீது நில அபகரிப்பு, ஊழல் என 87 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நிலஅபகரிப்பு வழக்கு ஒன்றில் 27 மாதங்கள் சிறையில் இருந்த ஆசம் கானுக்கு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

உத்தரப் பிரதேசம், டெல்லி, உத்தராகண்ட் மாநில அரசுகள், வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கில் பேசுபவர்கள்மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிக்கும் நிலைவரை அமைதி காக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஆசம் கானுக்கு எதிரான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...