போர் பாதிப்பு பகுதிகளின் நலத்திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவும்

 இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறை வேற்றப்படும் நலத்திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிசெய்யும் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது .

இதுதொடர்பாக மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் குழு தலைவர் டாக்டர் மைத்ரேயன் எழுப்பியிருந்த கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் அளித்த பதில் வருமாறு:

இலங்கை உள்நாட்டு போருக்குப் பிறகு, “போருக்கு பிந்தைய படிப்பினை மற்றும் நல்லிணக்கக்குழு (எல்எல்ஆர்சி) அளித்துள்ள பரிந்துரையின் படி பாதிக்கப்பட்டவடக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம், போரின்போது காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை, மக்கள் வசிப்பிடங்களில் நிறுத்தப்பட்ட படைகளை விலக்குதல், உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லையை குறைத்தல், சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தையில் ஈடுபடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவிடம், இதை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 11ம் தேதி நேரில் வலியுறுத்தினார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டபகுதிகளில் வீட்டுவசதி, கண்ணிவெடி அகற்றுதல், கல்வி, வாழ் வாதாரம், தொலைத் தொடர்பு, சாலைவசதி, பொருளாதார புனரமைப்பு உள்ளிட்ட நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு இந்தியா நிதி உதவி அளித்துவருகிறது.

அதைத்தொடர்ந்து வழங்குவதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதன்விளைவாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் இயல்புநிலை மெல்ல திரும்பி கொண்டிருக்கிறது’ என விகே. சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...