அமெரிக்காவில் உள்ள ஐ.நா, பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ‘பாதுகாப்பு’ மற்றும் ‘மேம்பாடு’ தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது . இக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா, தனது உரையை வாசிப்பதற்கு பதிலாக, போர்ச்சுக்கல் நாட்டின் உரையை வாசிக்க தொடங்கினார் .
இதன் காரணமாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள்-மத்தியில் சலசலப்பு உருவானது . உடனே இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி கிருஷ்ணாவிடம் தவறை சுட்டி காட்டினார். தவறை உணர்ந்த கிருஷ்ணாவும், பிறகு தனது உரையை வாசித்தார். மூன்று நிமிடங்கள் இந்த குழப்பம் நீடித்தது.
இது குறித்து எஸ்எம்.கிருஷ்ணா கூறுகையில்; உரையை மாற்றி-வாசித்ததில் தவறு ஒன்றும் கிடையாது ; அது ஒரு பெரிய விஷயமும் இல்லை . நிறைய பேப்பர்கள் என் முன்னால் கிடந்ததால், இந்த தவறு நிகழ்ந்து விட்டது என தெரிவித்துள்ளார்
Tamilthamarai talk;
எத்தனை அலட்சியமான பதிலை இந்திய வெளியுறவு துறை அமைசர் தெரிவித்துள்ளார் ஒரு பேச்சு போட்டிக்கு போவதற்க்கு கூட ஆயிரம்-முறை அதை படித்து தன்னைதயார் செய்து_கொண்டு செல்லுகின்ற போது ஒரு-நாட்டின் பிரதிநிதியாக உலகநாடுகள்
கூடியிருக்கின்ற சபையில் பேசும்போது எத்தனை கவனமாக இருக்கவேண்டும் , இந்தியாவை பற்றி ஒரு வார்த்தை மாற்றி சொன்னார் என்பதற்காக ஹிட்லரை எதிர்நின்ற சுபாஷ் சந்திர போஸ் உன் உதவியே தேவையில்லை என்று திரும்பி வந்த போது தோன்றியபெருமை..இதோ இவர்களை போன்று உள்ளவர்களால் குலைந்து போகிறது
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.