மோடிக்கு இலங்கையில் சிறப்பான வரவேற்பு

 இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு கடற்படையினர் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி, செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கான தனது ஐந்து நாள் சுற்றுப் பயணத்தை கடந்த 9-ம் தேதி தொடங்கினார்.

அதன்படி செஷல்ஸ், மோரீஷஸ் உள்ளிட்ட நாடுகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட அவர், இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானம் மூலம் வெள்ளிக் கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்தது.

இதன் பின்னர், கொழும்பு விமான நிலையத் திலிருந்து கார் மூலமாக இலங்கை அதிபர் மாளிகைக்கு மோடி சென்றார். அங்கு அவரை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, இலங்கைக் கடற்படையினர் மோடிக்கு 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு முறை வரவேற்பு அளித்தனர். பின்னர், கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக் கொண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...