இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு கடற்படையினர் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி, செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கான தனது ஐந்து நாள் சுற்றுப் பயணத்தை கடந்த 9-ம் தேதி தொடங்கினார்.
அதன்படி செஷல்ஸ், மோரீஷஸ் உள்ளிட்ட நாடுகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட அவர், இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானம் மூலம் வெள்ளிக் கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்தது.
இதன் பின்னர், கொழும்பு விமான நிலையத் திலிருந்து கார் மூலமாக இலங்கை அதிபர் மாளிகைக்கு மோடி சென்றார். அங்கு அவரை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, இலங்கைக் கடற்படையினர் மோடிக்கு 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு முறை வரவேற்பு அளித்தனர். பின்னர், கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக் கொண்டார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.