வளரும் நாடுகளுக்காக 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் சோலார் திட்டம்:

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கான நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் – கீ-மூன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார்.

மேலும் மத்திய மின்துறை மந்திரி பியூஸ் கோயல் மற்றும் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், வளரும் நாடுகளின் உதவிக்காக 10 ஆயிரம்கோடி டாலர் மதிப்பிலான சோலார் மின்உற்பத்தி திட்டத்தை இந்தியா-பிரான்ஸ் நாடுகள் கூட்டாக அறிமுகப் படுத்தியுள்ளது. சர்வதேச சோலார் கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் இதற்கான தொகையை முதலீடுசெய்ய உள்ளது. சோலார் கூட்டணி சார்பில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது திட்டம் இது.

எதிர் காலத்தில் வரவிருக்கும் மனிதசமுதாயம் இதுவரை பார்த்திராத மின் தட்டுப் பாட்டை எதிர்கொள்ளும் வகையில் சர்வதேச சோலார் கூட்டணி இந்ததிட்டத்தை தொடங்கியுள்ளதாக பியூஸ் கோயல் கூறினார்.

சர்வதேச சோலார் கூட்டணியில் அமெரிக்கா, பிரேசில், வங்கதேசம், நைஜிரியா உள்ளிட்ட 25 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். சோலார்கூட்டணி கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே ஆகியோரால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...