முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நவம்பர் 25ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. இதில் முக்கியமானது இயற்கை வேளாண்மைக்கான தேசியஇயக்கம். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இந்ததிட்டம் செயல்படுத்தபடும். இந்த திட்டத்திற்காக 2481 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள 1 கோடி விவசாயிகள் இயற்கை வேளாண்மை செய்ய இந்ததிட்டம் உதவும்.

பான் 2.0: அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் நிரந்தரகணக்கு எண் எனப்படும் பான் எண்ணை பொதுவணிக அடையாள காட்டியாக மாற்ற வசதியாக பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 1435 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

ஒரே நாடு ஒரேசந்தா: நாடு முழுவதும் அறிவார்ந்த ஆய்வு கட்டுரைகள் மற்றும் பத்திரிக்கை வெளியீடுகளுக்கான அணுகலை வழங்குவதற்காக ஒரே நாடு ஒரே சந்தா என்ற திட்டம் அறிமுகம் செய்யபட்டுள்ளது. 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் இந்த திட்டத்திற்கு 6000 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 6300-க்கும் மேற்பட்ட அரசு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்களும் மாணவர்களும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்வு கட்டுரைகளை எளிதாக அணுக முடியும்.

அடல் கண்டுபிடிப்பு இயக்கம்: நிதிஆயோக் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட அடல் கண்டுபிடிப்பு இயக்கம் தொடரும் என தெரிவிக்கபட்டுள்ளது. 2028 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் இதற்காக 2750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ரயில் திட்டங்கள்: 7,927 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 ரயில் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 7 மாவட்டங்களுக்கு பயன்தரும் வகையில் இந்த மூன்று ரயில் திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளன.

நீர்மின் திட்டங்கள்: அருணாச்சல பிரதேசத்தில் 3,689 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு நீர்மின் திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...