முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நவம்பர் 25ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. இதில் முக்கியமானது இயற்கை வேளாண்மைக்கான தேசியஇயக்கம். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இந்ததிட்டம் செயல்படுத்தபடும். இந்த திட்டத்திற்காக 2481 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள 1 கோடி விவசாயிகள் இயற்கை வேளாண்மை செய்ய இந்ததிட்டம் உதவும்.

பான் 2.0: அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் நிரந்தரகணக்கு எண் எனப்படும் பான் எண்ணை பொதுவணிக அடையாள காட்டியாக மாற்ற வசதியாக பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 1435 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

ஒரே நாடு ஒரேசந்தா: நாடு முழுவதும் அறிவார்ந்த ஆய்வு கட்டுரைகள் மற்றும் பத்திரிக்கை வெளியீடுகளுக்கான அணுகலை வழங்குவதற்காக ஒரே நாடு ஒரே சந்தா என்ற திட்டம் அறிமுகம் செய்யபட்டுள்ளது. 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் இந்த திட்டத்திற்கு 6000 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 6300-க்கும் மேற்பட்ட அரசு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்களும் மாணவர்களும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்வு கட்டுரைகளை எளிதாக அணுக முடியும்.

அடல் கண்டுபிடிப்பு இயக்கம்: நிதிஆயோக் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட அடல் கண்டுபிடிப்பு இயக்கம் தொடரும் என தெரிவிக்கபட்டுள்ளது. 2028 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் இதற்காக 2750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ரயில் திட்டங்கள்: 7,927 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 ரயில் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 7 மாவட்டங்களுக்கு பயன்தரும் வகையில் இந்த மூன்று ரயில் திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளன.

நீர்மின் திட்டங்கள்: அருணாச்சல பிரதேசத்தில் 3,689 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு நீர்மின் திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...