ராணுவ ரகசியங்களை எப்படி வெளிப் படையாக தெரிவிக்க முடியும்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல்நடத்தும் சதித்திட்டத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" என்ற அதிரடி தாக்குதலில் இந்திய ராணுவம் ஈடுபட்டு பாகிஸ்தான் பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் 7 முகாம்களை அளித்தது. இந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.

ஆனால், பாகிஸ்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடை பெறவில்லை என்றும் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு மட்டுமே நடைபெற்றதாகவும் சமாளித்து வருகிறது.

தாக்குதல் பற்றி காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முதலானோர் சந்தேகம் வெளிப்படுத்தினர். தாக்குதலுக்கான வீடியோ ஆதாரம்கேட்டார் கேஜ்ரிவால். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா செய்திதொடர்பாளர் வீரேந்திர குப்தா, போலி கவுரவத்திற்காக பாகிஸ்தான் தாக்குதல் நடைபெற வில்லை என்று கூறிவருவதாக தெரிவித்தார்.
 
பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் ஷர்மா கூறுகையில், ராணுவ ரகசியங்களை எப்படி வெளிப் படையாக தெரிவிக்க முடியும்? இது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானசெயல் அல்லவா. மும்பை தீவிரவாத தாக்குதல், பதன்கோட் தாக்குதல், யூரி தாக்குதல்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர் புள்ளதாக ஆதாரங்களை இந்தியா கொடுத்தது. ஆனால் பதிலுக்கு எதுவுமே நடக்கவில்லை. எனவேதான், இந்தியா நடவடிக்கை எடுக்க தொடங்கி யுள்ளது என்றார். உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ் ராஜ் அகிர் கூறுகையில், ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவை பிரதமரிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. அதை அம்பலப் படுத்துவதா, வேண்டாமா என்பதை பிரதமர் தான் முடிவுசெய்வார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...