ராணுவத்தினரின் வீரத்துக்கு பாராட்டுத்தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி செயலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணு வத்தினர் நடத்திய துல்லியத் தாக்குதலை (சர்ஜிகல் ஸ்டிரைக்) ஒரு குட்டிதீபாவளி போல மக்கள் கொண்டாடியதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், நமது ராணுவத்தினரின் வீரத்துக்கு பாராட்டுத்தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி செயலியையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாராணசியில் எரிவாயுக்குழாய் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை மோடி திங்கள் கிழமை தொடக்கி வைத்தார்.
இதன் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
எந்த நாட்டின் மீதும், அங்குள்ள மக்கள் மீதும் தாக்குதல் நடத்தும் எண்ணம் இந்திய ராணுவத்தினருக்கு என்றுமே இருந்ததில்லை. அதே சமயத்தில், நம் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனை நமது ராணுவத்தினர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள்.


அண்மையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் நடத்திய துல்லியத்தாக்குதல் இதற்கு ஓர் உதாரணமாகும். இந்த தாக்குதலை நாட்டுமக்கள் ஒருகுட்டி தீபாவளி போல கொண்டாடினர். குறிப்பாக, வாராணசியில் இந்த கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ராணுவத்தினரின் வீரத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டங்கள் மிகவும் பெருமை யடையச் செய்வதாக இருந்தன.


புதியசெயலி அறிமுகம்: இந்நிலையில், நமது ராணுவத் தினருக்கு உங்களது பாராட்டுகள் நேரடியாக சென்றடையும் விதமாக புதியசெயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, உங்கள் செல்லிடப் பேசியிலிருந்து "1922' என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இதற்கான செயலிபதவிறக்கம் ஆகும். அதனை பயன் படுத்தி ராணுவத்தினரை நீங்கள் பாராட்ட முடியும் என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...