எம்.எல்ஏ.,க்கள் விடுதி உள்ளிட்ட 30 இடங்களில் வருமானவரித் துறை சோதனை

ஆர். கே., நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்துவரும் வேளையில் சென்னையில் முக்கிய அதிகாரிகள் அமைச்சர் விஜய பாஸ்கர், எம்.எல்ஏ.,க்கள் விடுதி உள்ளிட்ட 30 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் இன்று (ஏப் -7) காலைமுதல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி, கல்குவாரி உள்ளிட்ட தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் சோதனை நடந்துவருகிறது. அமைச்சர் முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா எதிரொலியாகவும் சோதனை நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட அமைச்சரின் இலாகாவின் கீழ்வரும் அரசு அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடை பெற்றுவருகிறது. ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகப் பெரிய தலைகுனிவை சந்தித்து வருகிறது என்பதற்கு இந்த வருமான வரித்துறை சோதனைகள் எல்லாம் சாட்சியமாக அமைந்துள்ளன.


அதிமுக ஆட்சிக்கு வருமான வரித் துறை சோதனை புதிதல்ல. அரவக் குறிச்சி தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிலமாதங்கள் கழித்து மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் வீட்டிலும், சென்னை மாநகரத்தின் மேயராக இருந்த சைதைதுரைசாமி வீட்டிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, பன்னீர்செல்வம் முதல்-அமைச்சாரக இருந்தபோது தமிழகத்தின் தன்மானச் சின்னமான தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித் துறை சோதனை செய்யப்பட்டது. குறிப்பாக கோட்டையில் உள்ள தலைமை செயலாளர் ராம் மோகன்ராவ்  அலுவலகத்திலேயே வருமான வரித்துறை சோதனை செய்யப் பட்டு தமிழக நிர்வாக வரலாற்றில் ஒருகரும்புள்ளி வைக்கப்பட்டது. பிறகு மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...