பசுவதை செய்தால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை

பசுவதை செய்தால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம்வரை அபராதமும் விதிக்க வகைசெய்யும் திருத்தப்பட்ட சட்டத்தின் புதியவிதிகளை குஜராத் மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்டது.


குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா, அந்த மாநில சட்ட பேரவையில் கடந்த மார்ச் 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட திருத்தமசோதாவுக்கு மாநில ஆளுநர் ஓ.பி.கோலி கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், புதிய விதி முறைகளை அந்த மாநில அரசு சனிக் கிழமை வெளியிட்டது.


அதன்படி, பசுவதையில் ஈடுபடுவோருக்கு இனி அதிக பட்சம் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை அபராதமும் விதிக்க வகை செய்யப் பட்டுள்ளது. சட்ட விரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்களுக்கும், உரிய அனுமதிபெறாமல் மாடுகளை வேறொரு இடத்துக்கு இடமாற்றம் செய்பவர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள்படி தண்டனை வழங்கப்படும்.


திருத்தப்பட்ட புதியசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பிணையில் வெளிவர இயலாது. மாட்டிறைச்சியை சோதனை செய்து உறுதிப்படுத்த 5 இடங்களில் தடயவியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 நடமாடும் ஆய்வுக் கூட வேன்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
குஜராத் விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் திருத்தப்படுவதற்கு முன்பு பசுவதையில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுவரை சிறையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2011-ஆம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக பதவி வகித்த நரேந்திர மோடி பசுவதைக்கு முழுமையாக தடைவிதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...