சரக்கு மற்றும் சேவைவரி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஒற்றை வரி முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி முறை, நேற்று நள்ளிரவு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இன்றுமுதல், நாடு முழுதும் இது நடைமுறைக்கு வருகிறது.

பார்லிமென்ட் மையமண்டபத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்த்துடன், இந்த வரிமுறையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

நாடு முழுதும் நடைமுறையில் இருந்த பலமுனை வரிவிதிப்பு முறைக்கு மாற்றாக, ஒரே சீரான, ஒற்றைவரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை கொண்டுவருவதற்காக, கடந்த, 17 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்வேறு சோதனைகள், தடைகள், எதிர்ப்புகளை மீறி, இந்த வரலாற்று சிறப்புமிக்க வரி விதிப்புமுறை, ஜூலை, 1 முதல் அமலுக்குவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக அறிமுக விழா, பார்லிமென்ட் மையமண்டபத்தில், நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்த்து களுடன், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, ஜிஎஸ்டி., வரி முறையை நாட்டுக்கு அறிமுகப் படுத்தினார்

பிரதமர் நரேந்திர மோடி.பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலமானவர்கள் பங்கேற்ற விழாவில், அவர்களின் பலத்தகரகோஷங்களுக்கு இடையே, 'ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை' என்று அழைக்கப்படும் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டது. அதையடுத்து, இந்த வரி விதிப்பு முறை, நாடுமுழுதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...