சரக்கு மற்றும் சேவைவரி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஒற்றை வரி முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி முறை, நேற்று நள்ளிரவு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இன்றுமுதல், நாடு முழுதும் இது நடைமுறைக்கு வருகிறது.

பார்லிமென்ட் மையமண்டபத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்த்துடன், இந்த வரிமுறையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

நாடு முழுதும் நடைமுறையில் இருந்த பலமுனை வரிவிதிப்பு முறைக்கு மாற்றாக, ஒரே சீரான, ஒற்றைவரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை கொண்டுவருவதற்காக, கடந்த, 17 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்வேறு சோதனைகள், தடைகள், எதிர்ப்புகளை மீறி, இந்த வரலாற்று சிறப்புமிக்க வரி விதிப்புமுறை, ஜூலை, 1 முதல் அமலுக்குவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக அறிமுக விழா, பார்லிமென்ட் மையமண்டபத்தில், நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்த்து களுடன், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, ஜிஎஸ்டி., வரி முறையை நாட்டுக்கு அறிமுகப் படுத்தினார்

பிரதமர் நரேந்திர மோடி.பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலமானவர்கள் பங்கேற்ற விழாவில், அவர்களின் பலத்தகரகோஷங்களுக்கு இடையே, 'ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை' என்று அழைக்கப்படும் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டது. அதையடுத்து, இந்த வரி விதிப்பு முறை, நாடுமுழுதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்த� ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...