வெளிநாட்டு சதி இல்லாத முதல் பார்லி கூட்டம் – பிரதமர் மோடி பேச்சு

”கடந்த 10 ஆண்டுகளில் பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, வெளிநாட்டு சக்திகள் சதி செய்து சர்ச்சை தீயை மூட்டி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் நடக்கும் முதல் கூட்டம் இது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று துவங்கியது. அதற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

வரும், 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் புதிய நம்பிக்கையையும், சக்தியையும் அளிக்கும் என நம்புகிறேன்.

ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களை ஆசிர்வதிக்க வேண்டும் என, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி தேவியிடம் வேண்டிக் கொண்டேன்.

இந்த கூட்டத் தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். விரிவான விவாதத்துக்குப் பின் அவை சட்டமாக்கப்படும்.

குறிப்பாக, பெண்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், மதவெறி அல்லது நம்பிக்கை அடிப்படையிலான பாகுபாடுகள் அகற்றப்படுவதற்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக இந்த கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

நம் நாடு இளமையானது. இப்போது, 20 – 25 வயதில் உள்ள இளைஞர்கள், 45 – 50 வயதாகும்போது, வளர்ந்த இந்தியாவின் முழுப்பயனை அடைவர்.

அந்த நேரத்தில் கொள்கைகளை உருவாக்கும் இடத்தில் அவர்கள் அமர்ந்திருப்பர். வளர்ந்த இந்தியாவை பெருமையுடன் முன்னெடுத்து செல்வர்.

எனவே, வளர்ந்த இந்தியா என்ற நம் தீர்மானத்தை நிறைவேற்ற, அனைத்து எம்.பி.,க்களும் இந்த கூட்டத்தொடரில் தங்கள் பங்களிப்பை அளிப்பர் என நம்புகிறேன்.

கடந்த, 2014 முதல், பார்லிமென்ட் கூட்டத் தொடர் கூடுவதற்கு முன், ஏதாவது ஒரு சர்ச்சை தீயை மூட்டுவதை வெளிநாட்டு சக்திகள் வழக்கமாக வைத்துள்ளன. முதல்முறையாக எவ்வித குழப்பமின்றி கூட்டத்தொடர் துவங்குவதை, இப்போது தான் பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...