காங்கிரஸ் 2.5 லட்சம்கோடியை வீணடித்திருக்கிறது நிதின் கட்கரி

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னெளவில் பாரதிய ஜனதாவை சேர்ந்த மேயர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது, இதில் உரையாற்றிய பாஜக தலைவர் நிதின் கட்கரி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைமை தி,மு,கவிடம் சரண்அடைந்து விட்டனர் என குற்றஞ்சாட்டி உள்ளார்,

எந்த வகையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய் வேண்டும் என்பதை தீர்மானிக்க மத்தியஅமைச்சர்கள் சிலர் அடங்கிய தனி குழுவை பிரதமர் மன்மோகன் சிங் ஆரம்பத்தில் ஏற்படுத்தி இருந்தார். அந்த குழு தேவைஅல்ல துறையினுடைய அமைச்சரே முடிவு செய்வார் என தோழமை கட்சியான தி.மு.க வற்புறுத்தியதை ஏற்று கொண்டு 2006லேயே அத்துறை சம்பந்தபட்ட உரிமைகலை அமைச்சருக்கு விட்டு கொடுத்தார் பிரதமர்.

நடந்துள்ள முறைகேட்டில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர தங்களுக்கு பங்கு இல்லை என ஒதுங்க முடியாது. ஒதுக்கீடு எப்படி நடந்தது, அதில்பலன் பெற்றார்கள் யார் என்பது எல்லாம் காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமருக்கும் நன்றாக தெரிந்தே இருந்தது

2 ஜி ஒதுக்கீட்டை முறையாக ஏல முறையில் விற்றிருந்தால் அரசுக்குச் சுமார் 1,76,000 கோடி கிடைத்திருக்கும் தில்லியில் நடந்துமுடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு செய்தஏற்பாடுகளில ஒன்னுக்கு மூணுமடங்கு விலை பேசப்பட்டு பொருள்கள் வாங்க பட்டுள்ளன. இந்த-வகையில் அரசுகு சுமார் ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிட பட்டிருக்கிறது. இந்த இருஊழல்களிலும் சேர்த்து மொத்தம் 2.5 லட்சம்கோடி வீணடித்திருக்கிறது ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு. இவையெல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தவை, இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கால் எப்படிக் கூற முடியும்?

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வலுப்படுத்த தனித்திட்டம் வகுத்திருக்கிறோம். 2025ல் மாநிலத்தில் பாஜக செல்வாக்கு உள்ள கட்சியாக ஆட்சிநடத்தும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்துவோம்.பிகாரில் நிதிஷ்குமார் தலைமையில் “தேசியஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்”.பாஜக எதிர்கால அரசியல் வளர்ச்சி திட்டங்களை மையமாக வைத்தேஇருக்கும். எங்களுடைய கட்சியின் திட்டங்களிலும் கொள்கைகளிலும் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தருவோம்’ என்றார் நிதின் கட்கரி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...