உத்தரப்பிரதேச தலைநகர் லக்னெளவில் பாரதிய ஜனதாவை சேர்ந்த மேயர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது, இதில் உரையாற்றிய பாஜக தலைவர் நிதின் கட்கரி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைமை தி,மு,கவிடம் சரண்அடைந்து விட்டனர் என குற்றஞ்சாட்டி உள்ளார்,
எந்த வகையில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய் வேண்டும் என்பதை தீர்மானிக்க மத்தியஅமைச்சர்கள் சிலர் அடங்கிய தனி குழுவை பிரதமர் மன்மோகன் சிங் ஆரம்பத்தில் ஏற்படுத்தி இருந்தார். அந்த குழு தேவைஅல்ல துறையினுடைய அமைச்சரே முடிவு செய்வார் என தோழமை கட்சியான தி.மு.க வற்புறுத்தியதை ஏற்று கொண்டு 2006லேயே அத்துறை சம்பந்தபட்ட உரிமைகலை அமைச்சருக்கு விட்டு கொடுத்தார் பிரதமர்.
நடந்துள்ள முறைகேட்டில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர தங்களுக்கு பங்கு இல்லை என ஒதுங்க முடியாது. ஒதுக்கீடு எப்படி நடந்தது, அதில்பலன் பெற்றார்கள் யார் என்பது எல்லாம் காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமருக்கும் நன்றாக தெரிந்தே இருந்தது
2 ஜி ஒதுக்கீட்டை முறையாக ஏல முறையில் விற்றிருந்தால் அரசுக்குச் சுமார் 1,76,000 கோடி கிடைத்திருக்கும் தில்லியில் நடந்துமுடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு செய்தஏற்பாடுகளில ஒன்னுக்கு மூணுமடங்கு விலை பேசப்பட்டு பொருள்கள் வாங்க பட்டுள்ளன. இந்த-வகையில் அரசுகு சுமார் ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிட பட்டிருக்கிறது. இந்த இருஊழல்களிலும் சேர்த்து மொத்தம் 2.5 லட்சம்கோடி வீணடித்திருக்கிறது ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு. இவையெல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தவை, இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கால் எப்படிக் கூற முடியும்?
உத்தரப்பிரதேசத்தில் பாஜக வலுப்படுத்த தனித்திட்டம் வகுத்திருக்கிறோம். 2025ல் மாநிலத்தில் பாஜக செல்வாக்கு உள்ள கட்சியாக ஆட்சிநடத்தும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்துவோம்.பிகாரில் நிதிஷ்குமார் தலைமையில் “தேசியஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்”.பாஜக எதிர்கால அரசியல் வளர்ச்சி திட்டங்களை மையமாக வைத்தேஇருக்கும். எங்களுடைய கட்சியின் திட்டங்களிலும் கொள்கைகளிலும் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தருவோம்’ என்றார் நிதின் கட்கரி.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.