மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

 1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு
2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி அளவு
3. நாவல் இலைகள் கைப்பிடி அளவு
4. கொய்யாமரத்து இலைகள் கைப்பிடி அளவு
5. மாந்துளிர்கள் கைப்பிடி அளவு
6. வெப்பாலை மரத்து இலைகள் கைப்பிடி அளவு
இவற்றை தனித்தனியே சுத்தம் செய்து 14 நாட்கள் நிழலிலும் ஒரு நாள் வெய்யிலிலும் உலர்த்தி ஒவ்வொன்றையும் தனித்தனியே இடித்து தூளாக்கி மாச்சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

1. ஆலமரத்தின் பிஞ்சு விழுதுகள் சாண் அளவு கைப்பிடி அளவு
2. கருவேலமரத்தின் உட்பட்டைகள் உள்ளங்கை அளவில் 4 பட்டைகள்
3. மகிழமரத்து உட்பட்டை அளவு 4
4. வாகை மரத்து உட்பட்டை உள்ளங்கை அளவு 4 பட்டை. இவை ஈரமாக இருக்கும்போதே சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை நசுக்கி வெய்யிலில் 3 நாட்கள் உலர்த்தி இடித்து மாச்சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் நாட்டு மருந்து கடைகளில் பொருட்களை வாங்கி பொடி செய்து கொள்ளவும்.
1. கல்நார் 5௦ கிராம்
2. லவங்கப்பூ 1௦௦ கிராம்
3. லவங்கப்பட்டை 1௦௦ கிராம்
4. மிளகு 5௦ கிராம்
5. களிப்பாக்கு 5௦ கிராம்
6. காசிக்கட்டி 5௦ கிராம்
7. சீரகம் 5௦ கிராம்
8. இந்துப்பு 5௦ கிராம்
9. படிகாரம் 5௦ கிராம்(பொரித்துக் கொள்ள வேண்டும்) இவற்றை வெய்யிலில் 2 நாட்கள் உலர்த்தி தனித்தனியே இடித்து தூளாக்கி மாச்சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது முதலில் கூறிய தழைகளின் தூள் இரண்டாவதாக கூறிய மரத்தின் பட்டை ஆலம் விழுதுத்தூள், மூன்றாவதாகக் கூறிய கடைச்சரக்குத் தூள் மூன்றையும் ஒன்றாகாக் கலக்க வேண்டும். இதில் 1௦௦ கிராம் உப்புத்தூளையும் 2௦ கிராம் கற்பூரத்தை தூள் செய்து அதையும் கலந்து ஒரு பெரிய பாட்டலில் இருப்பு வைத்து தினசரி இந்த பற்பொடியால் பல் விளக்கிவர எவ்வித கோளாறுகளும் வராமல் பற்கள் எதுவும் விழாமல் பாதுகாக்கலாம். 6 பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த தூள் ஆறுமாதம் வரை போதுமானதாக இருக்கும்.

ஒரு வேளைக்கு ½ ஸ்பூன் தூள் பல் விளக்கப்போதுமானது. பற்களை விளக்கிய பின் மித சூடான நீரில் வாயை 4,5 முறைக் கொப்பளித்து உமிழ வேண்டும்.

நன்றி : சித்த மருத்துவத்தில் கண்கள் பாதுகாப்பு
– க. சின்னசாமி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர� ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...