டோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வுஅல்ல என்று ராஜ்ய சபாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பூடானின் டோக்லாமை கைப்பற்றும் நோக்கில் சீனா சாலைகள் அமைத்தது. ஆனால் இந்திய வீரர்கள் இதனைத்தடுத்து நிறுத்தினர்.
இதனால் டோக்லாம் பீடபூமியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. டோக்லாமை சீனா கைப்பற்றிவிட்டால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பேராபத்து ஏற்படும் என்பதால் ராணுவம் அங்கு குவிக்கப் பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், சீனாவுடன் ராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் சீனாவின் தூதரை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசியது ஏன்? நமது ராணுவம் வலிமையானதுதான். நாம் பேச்சு வார்த்தை மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புகிறோம். இருதரப்பும் ஒப்புக்கொள்ளக் கூடிய தீர்வை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.