டோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வுஅல்ல என்று ராஜ்ய சபாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பூடானின் டோக்லாமை கைப்பற்றும் நோக்கில் சீனா சாலைகள் அமைத்தது. ஆனால் இந்திய வீரர்கள் இதனைத்தடுத்து நிறுத்தினர்.
இதனால் டோக்லாம் பீடபூமியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. டோக்லாமை சீனா கைப்பற்றிவிட்டால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பேராபத்து ஏற்படும் என்பதால் ராணுவம் அங்கு குவிக்கப் பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், சீனாவுடன் ராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் சீனாவின் தூதரை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசியது ஏன்? நமது ராணுவம் வலிமையானதுதான். நாம் பேச்சு வார்த்தை மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புகிறோம். இருதரப்பும் ஒப்புக்கொள்ளக் கூடிய தீர்வை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.