”இனி வரும் காலங்களில் போர் முறைகள் என்பது கணிக்க முடியாதபடியும், ஆக்ரோஷமாகவும் இருக்கும்”, என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ராணுவ தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய ராணுவத்தின் நவீன போர் யுத்திகள் குறித்து நாம் பேசும்போது, வரும் நாட்களில், போர் என்பது இன்னும் ஆக்ரோஷமாகவும், கணிக்க முடியாததாகவும் இருக்கும். நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, எதிர்காலத்தின் போர் முறைகள் மாறக்கூடும்.
இதனால், இந்த பல்முனை சவால்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருக்க வேண்டும். மேலும், முழுமையான திறன் மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்கள் இரண்டிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |