செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.
வெற்றிலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலைவலி உடனே குணமாகும்.
முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் மூன்று துளிகள் காதில்விட்டு வர காதுவலி குணமாகும்.
வெற்றிலையின் மீது சிற்றாமணக்கெண்ணெய் தடவி தணலில் வாட்டி வயிற்றின்மேல் ஒட்டி வைத்தால் குழந்தைகளின் வயிற்று உப்பிசம் குணமாகும்.
ஐந்து வெற்றிலைகளை எடுத்து அதன் பின்புறத்தில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குலைத்துப் பூசி சட்டியை அடுப்பில் வைத்து சூடேற்றி வெற்றிலையின் மருந்து தடவிய பாகத்தை சட்டியிலிடும்படி ஒவ்வொன்றாக வதக்கி 200 மி.லி தண்ணீர்விட்டு கொதிப்பித்து வலிகாணும் நேரத்தில் ஒருவேளை மட்டும் கொடுக்க கர்ப்பவதியின் வயிற்றுவலி குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
1kissing