கவுரி கொலையை அரசியலாக்குகிறார் ராகுல்

மூத்த பத்திரிகையாளர் கவுரிகொலையை காங்கிரஸ் தலைவர் ராகுல் அரசியலாக்குவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: கவுரிக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு பாதுகாப்புவழங்க தவறியது ஏன்? கொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல், பா.ஜ., தலைவர்கள்மீது தேவையற்ற விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன. அதே நேரத்தில் கேரளா மற்றும் கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டபோது அவர்கள் வாய் திறக்க மறுத்தது ஏன்? கவுரி, நக்சலைட்களை சரணடையசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக, அவரது சகோதரர் கூறியுள்ளார். இதனை கவுரி கர்நாடகஅரசின் ஒப்புதலோடு தான் செய்தாரா? அவ்வாறு செய்திருந்தால், கர்நாடக அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்காதது ஏன்?

கவுரி கொலைதொடர்பாக விசாரணை துவங்கும் முன்னரே, எந்தபயிற்சியும் இல்லாமல் பேசும் ராகுல், வெளிப்படையாக ஆர்எஸ்எஸ் வலதுசாரி சித்தாந்தமே கவுரிகொலைக்கு காரணம் எனக்கூறினார். குற்றவாளி எனவும் தீர்ப்புகூறினார். இது போன்ற தவறான கருத்து தெரிவித்துள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு எப்படி நேர்மையான விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...