காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். இது சில சமயம் மரணத்திற்கு ஏதுவாகும். இந்தச் சமயத்தில் இளநீரிலுள்ள நீர் உடலுக்கு நீர்த்தன்மையைத் தருவதோடு, தேவையான தாது உப்புகளையும் சேர்க்கும். மேலும் இளநீர் எதிர்ப்பு சக்தி, கெட்ட பாக்டீரியாக்களை எதிர்ப்பதால், குடலிலுள்ள காலரா கிருமிகளை வெளியேற்றும்.
ஊசி மூலம் காலராவுக்காக பொட்டாசியம் உடலில் எற்றுவதைவிட, இளநீரிலுள்ள பொட்டாசியம் மிகுந்த மருத்துவப் பயனுடையது.
இதயத்தை பலமாக்கும். நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கும். செரிமான மண்டலத்தையும் செயல் துடிப்போடு சீராக்கும்.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.