எச்.ராஜாவின் தந்தையுமான எஸ்.ஹரிஹரன் காலமானார்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த வரும் பாஜக தேசியச்செயலர் எச்.ராஜாவின் தந்தையுமான எஸ்.ஹரிஹரன் (88) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் சனிக்கிழமை (செப்.30) இரவு காலமானார்.


அவருக்கு எச். ராஜா உள்பட 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். 1929-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் கிராமத்தில் பிறந்த ஹரிஹரன், இளம் வயதிலேயே தன்னை ஆர்எஸ்எஸ். இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். 


1948-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்ட போது, ஆறுமாதம் சிறையில் இருந்தார்; அப்போது பாஜக முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ஜனா கிருஷ்ண மூர்த்தி இருந்த சிறை அறையில் ஹரிஹரனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கல்வித்துறையில் சாதனையாளர்: யோகா நிபுணர், உடற்பயிற்சி கல்வியில் சிறந்து விளங்கி தங்கப் பதக்கம், உடற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவ 5 பாட நூல்களின் ஆசிரியர், வர்மா-ஃபிஸியோதெரப்பி சிகிச்சையில் சிறந்து விளங்கி பக்கவாத நோயாளிகளுக்கு உதவியவர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்வியாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்டவை மறைந்த ஹரிஹரனுக்கு பெருமை சேர்ப்பவையாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...