திருப்பூர் மாவட்டம் ஷெரீப் காலனியில் வசித்துவரும் இவர் 1957 ம் ஆண்டு பிறந்தவர். 1978 ம் ஆண்டு வ உ சிதம்பரம் கல்லூரியில் பிடிஏ பட்டம்பெற்றவர். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும், ஹரி சஷ்டி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில், ‘ஜில்லா காரியவாக்’ பொறுப்பில் இருந்துள்ளார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு,1998 ம் ஆண்டு முதன் முறையாக கோவை தொகுதியில் எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது அதிமுக கூட்டணியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட இவர் 2 லட்சம் ஓட்டுவித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.13 மாதங்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பிறகு பிறகு 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா கோவை தொகுதியில் இவர் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ராதாகிருஷ்ணன் முயற்சியால், கோவைக்கு சி.ஆர்.பி.எப் .( மத்திய ரிசர்வ் படை ) , ஆர்.ஏ. எப்., ( மத்திய அதி விரைவு போலீஸ் ) படை அமைப்புகள் வந்தன.
2003 முதல் 2007 வரை தமிழக பா.ஜ., தலைவராக பதவிவகித்துள்ள இவர், தேசிய செயற் குழு உறுப்பினராகவும உள்ளார். 2016 முதல் 2019 வரை மத்திய கயிறு வாரிய தலைவ ராகவும் இருந்துள்ளார். கேரள மாநில பாஜக ., பொறுப் பாளராகவும் பதவி வகித்துள்ளார்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |