இஞ்சியின் மருத்துவ குணங்கள்

 வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, அரைத் தேக்கரண்டி மிளகு, அதே அளவு சீரகம் இரண்டையும் நைத்து இத்துடன் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து, இறக்கி ஆறிய பின் வடிகட்டி வைத்துக் கொண்டு, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சங்களவு குடித்து வந்தால் வயிற்றுப் பெருமல் அடங்கும். வயிற்று வலி குணமாகும்.

3௦ கிராம் இஞ்சியை வாங்கி வந்து, அதன் தோலை சீவிக் கழுவி விட்டு, சுண்டைக்காயளவு பருமனாக நறுக்கி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து இதில் விட்டு, 5 கிராம் இந்துப்புத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி வெயிலில் வைக்க வேண்டும். உலர உலர சாற்றில் போட்டு எடுத்து, இஞ்சித்துண்டுகளை உலர்ந்த பின் அதே சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை தேக்கரண்டியளவு துண்டுகளை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி விட்டுச் சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும். இந்த விதமாக ஏழு நாட்கள் சாப்பிட்டால் போதும். பித்தக் கோளாறு அத்தனையும் குணமாகும்.

இருதய பலவீனம், இருதயத்தில் வலி, இருதயப் படபடப்பு போன்ற கோளாறுகளைப் போக்க, 1௦ கிராம் இஞ்சியைக் கழுவி, அம்மியில் வைத்து நைத்துச் சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு வைத்தால் அதிலுள்ள சுண்ணாம்பு வண்டல் அடியில் தங்கிவிடும். மேலே தெளிந்த நீர் நிற்கும். இந்த நீரை மட்டும் வடிகட்டி, அத்துடன் இரண்டு தேக்கரண்டி தேனும் சேர்த்துக் கலக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து விடவேண்டும். இந்த விதமாக ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெரும். இருதய சம்மந்தமான கோளாறுகள் நீங்கும்.

வறட்டு இருமலாக இருந்தாலும், ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தாலும் அதை குணப்படுத இஞ்சியை தட்டிச் சாறு எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்திருந்தால் சுண்ணாம்பு அடியில் தங்கி, மேலாகத் தெளிவு நீர் நிற்கும். தெளிந்த நீரை மட்டும் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவும், மாதுளம் பழத்தை இரண்டாக நறுக்கி உரலில் போட்டு இடித்துச் சாறு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவும், ஒரு தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து, கலக்கி காலை, மாலையாக இரண்டு வேளை சாப்பிட்டால் இருமல் குணமாகும். குழந்தைகளுக்கு பாதியளவு கொடுக்க வேண்டும்.

இஞ்சி 5 கிராம், சீரகம் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து, அதை அப்படியே வைத்திருந்தால் மேலே தெளிந்த நீரும், அடியில் சுண்ணாம்பு வண்டலும் தேங்கி நிற்கும். மேலே உள்ள நீரை மட்டும் இறுத்தி மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சங்களவு குடித்து வந்தால் அஜீரணம் புளியேப்பம் நீங்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...