சென்னை, ஐ.ஐ.டி.,யில், கணேசதுதி பாடியதில் தவறு இல்லை,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.சென்னை அருகே, பூந்த மல்லியில் உள்ள, திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில், எச்.ராஜா, நேற்று சுவாமிதரிசனம் செய்தார்.பின், அவர் கூறியதாவது :இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான், பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்துகோவில் மீட்பு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன்.
கோவில் சொத்துக்களை விஞ்ஞான முறையில், அரசு கொள்ளை யடித்து வருகிறது. பூந்தமல்லி, திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில், போலிகணக்கு வாயிலாக, பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு வருகிறது. ஊழல்செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும். தமிழகத்தில், கோவில் சொத்துகளை முறையாக வாடகைக்கு விட்டால், ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் வருவாய்கிடைக்கும். இதன்மூலம், கல்வி, மருத்துவம் இலவசமாக கொடுக்கலாம்.
சென்னையில், ஐ.ஐ.டி., என்ற, உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவன விழாவில், கணேசதுதி பாடியதில், என்ன தவறு உள்ளது; இதுகுறித்து கருத்து கூறும் தலைவர்களை கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.