புளிப்பு

 உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள அழுக்கை அகற்றும் சக்தி உடையது. இரத்தத்தில் உள்ள சூட்டைக் குறைக்கும் தன்மையுள்ளது.

இனிப்புச் சுவைக்கு நட்பாக புளிப்பு இருக்கிறது. அதிகமான புளிப்பினால் வயிறு வாதக் காற்றுடன் பெருத்துக் காணப்படும். ஆனால் அப்போது தோள்கள் மற்றும் பாதங்கள் சிறுத்துக் காணப்படும்.

புளிப்பு அளவுக்கு அதிகமாகும்போது, மலச்சிக்கல் உண்டாகிறது. மற்றும் மந்தத் தன்மையுடன் நோய்க்குக் காரணமாகிறது. உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பும், கொழுப்புக்கு நட்பான புளிப்பும், திமிருக்குக் காரணமாகும். அத்துடன் காரம் அளவுக்கு அதிகமாகும்போது, அந்தளவு கோபத்தை உண்டாக்குகிறது.

நன்றாகப் பசியெடுத்த பிறகே அளவுடன் உண்ணும் வழக்கம் உள்ளவர்க்குப் புளிப்புச் சுவை உடலில் அதிகமாகாது. தினமும் குறித்த நேர்த்தில் உணவு வேண்டும் என்பது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று.

மலச்சிக்கல் ஏற்படுவதால் அம்மலத்தின் மனம் உடல் முழுவதும் பரவுகிறது. அப்படிப் பருவுவதை வாயில் துர்நாற்றம், அதிக ஊத்தை இருப்பதனால் உணரலாம்.

வாத நோயால் அடிக்கடி வருந்துபவர், கிழங்கு உணவுகள், எண்ணெய்ப் பொருள்கள் முற்றிலும் நீக்கி, புளிப்பு உணவுகளை மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். அரிசியினால் ஆன உணவை மிகவும் குறைத்து அவற்றிற்குப் பதிலாக கோதுமை உணவைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

நிலத்திற்குக் கீழ் விளையும் விளைபொருள்கள் தன்மையில் வேறுபட்டவை என்றாலும், வெங்காயம், பூண்டு, இஞ்சி, முள்ளங்கி, கருணைக்கிழங்கு ஆகியவற்றை மட்டும் அளவுடன் பயன்படுத்தலாம்.

எலுமிச்சம்பழம், புளி, கிச்சளிப்பழம், நாரத்தங்காய், புளியங்காய், புளியங்கொழுந்து, மாங்காய் பிஞ்சி, சீமைக்களாக்காய், புளிச்சக் கீரை, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், காராமணிக்காய், அவரைக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, உலர்ந்த காராமணி, உலர்ந்த பட்டாணி, உலர்ந்த மொச்சை, வெண்ணெய் போன்றவற்றில் புளிப்புச் சுவை உள்ளது.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...