புளிப்பு

 உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள அழுக்கை அகற்றும் சக்தி உடையது. இரத்தத்தில் உள்ள சூட்டைக் குறைக்கும் தன்மையுள்ளது.

இனிப்புச் சுவைக்கு நட்பாக புளிப்பு இருக்கிறது. அதிகமான புளிப்பினால் வயிறு வாதக் காற்றுடன் பெருத்துக் காணப்படும். ஆனால் அப்போது தோள்கள் மற்றும் பாதங்கள் சிறுத்துக் காணப்படும்.

புளிப்பு அளவுக்கு அதிகமாகும்போது, மலச்சிக்கல் உண்டாகிறது. மற்றும் மந்தத் தன்மையுடன் நோய்க்குக் காரணமாகிறது. உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பும், கொழுப்புக்கு நட்பான புளிப்பும், திமிருக்குக் காரணமாகும். அத்துடன் காரம் அளவுக்கு அதிகமாகும்போது, அந்தளவு கோபத்தை உண்டாக்குகிறது.

நன்றாகப் பசியெடுத்த பிறகே அளவுடன் உண்ணும் வழக்கம் உள்ளவர்க்குப் புளிப்புச் சுவை உடலில் அதிகமாகாது. தினமும் குறித்த நேர்த்தில் உணவு வேண்டும் என்பது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று.

மலச்சிக்கல் ஏற்படுவதால் அம்மலத்தின் மனம் உடல் முழுவதும் பரவுகிறது. அப்படிப் பருவுவதை வாயில் துர்நாற்றம், அதிக ஊத்தை இருப்பதனால் உணரலாம்.

வாத நோயால் அடிக்கடி வருந்துபவர், கிழங்கு உணவுகள், எண்ணெய்ப் பொருள்கள் முற்றிலும் நீக்கி, புளிப்பு உணவுகளை மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். அரிசியினால் ஆன உணவை மிகவும் குறைத்து அவற்றிற்குப் பதிலாக கோதுமை உணவைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

நிலத்திற்குக் கீழ் விளையும் விளைபொருள்கள் தன்மையில் வேறுபட்டவை என்றாலும், வெங்காயம், பூண்டு, இஞ்சி, முள்ளங்கி, கருணைக்கிழங்கு ஆகியவற்றை மட்டும் அளவுடன் பயன்படுத்தலாம்.

எலுமிச்சம்பழம், புளி, கிச்சளிப்பழம், நாரத்தங்காய், புளியங்காய், புளியங்கொழுந்து, மாங்காய் பிஞ்சி, சீமைக்களாக்காய், புளிச்சக் கீரை, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், காராமணிக்காய், அவரைக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, உலர்ந்த காராமணி, உலர்ந்த பட்டாணி, உலர்ந்த மொச்சை, வெண்ணெய் போன்றவற்றில் புளிப்புச் சுவை உள்ளது.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...