சிறுபான்மையின வாக்குகளைக் கவரவே வயநாடு தொகுதியில் போட்டி

சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவரவேண்டும் என்பதற்காகவே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

கேரளத்தில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து திருவனந்தபுரத்தில் வியாழக் கிழமை இரவு நடைபெற்ற பொதுகூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

தென்னிந்தியாவின் குரலை, நாட்டின் பிறபகுதிகளில் ஒலிக்கச் செய்வதற்காக, வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக ராகுல் காந்தி கூறினார். அப்படியெனில், அவர் திருவனந்தபுரம் தொகுதியையோ அல்லது பத்தனம்திட்டா தொகுதியையோ தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், அவர் தனக்கு மிகவும் பாதுகாப்பான வயநாடு தொகுதியைத் தேர்வுசெய்தது ஏன்?

அவர், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம், தென்னிந்தியாவுக்கு புதிதாக எந்த செய்தியையும் தரப்போவதில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவரவேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியை அவர் தேர்ந்தெடுத்தார்.

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசும், கம்யூனிஸ்டுகளும் நமதுபாரம்பரிய சடங்குகளுக்கு இடையூறு அளித்து வருகின்றனர். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றிவரும் பாரம்பரிய, கலாசாரத்தை அவர்கள் அழிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். (சபரிமலை விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்).

காங்கிரஸும், இடதுசாரியும் மாறிமாறி இந்த மாநிலத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். சந்தர்ப்ப வாதமே அவர்களுடைய கொள்கையாக உள்ளது. கேரளத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுகிறார்கள். ஆனால், தில்லியில் அவர்கள் இணைந்து செயல் படுகிறார்கள். இது, முழுக்க முழுக்க சுயநலமும், சந்தர்ப்பவாதமும் நிறைந்த அரசியல் என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...