தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு தேவை

நான் கேட்டபடி, ஏராளமான மக்கள் பலபுத்தகங்களை படித்து, அனுபங்களை என்னுடன் பகிர்ந்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில், அதிகளவு புத்தகங்களை படிக்க எனக்கு நேரம்கிடைப்பது இல்லை. ஆனால், உங்கள் மூலமாக, பலபுத்தகங்களில் உள்ள மையக்கருத்துகள் எனக்கு தெரியவந்துள்ளது.

தண்ணீர் சேமிப்பு குறித்து, பாரம்பரிய முறைகளை மக்கள் என்னிடம் பகிர்ந்துள்ளனர். மீடியாக்கள், இதனை பெரியஇயக்கமாக நடத்தி வருகின்றன. தண்ணீர் சேமிப்புக்கு அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.நாட்டில் முதல்முறையாக, தண்ணீர் கொள்கையை மேகாலாயா அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக மேகாலயா அரசிற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அரியானாவில், குறைந்தநீரை பயன்படுத்தப்படும் பயிர்கள் நடவு செய்யப்படுகின்றன. இதன்மூலம் விவசாயிகளுக்கு இழப்புகுறைகிறது.தற்போது பண்டிகை காலம். இந்த காலகட்டத்தில், பலவிழாக்கள் நடக்கும். இதனை நாம் தண்ணீர் சேமிப்பு குறித்த செய்தியை அனைவருக்கும் அனுப்ப ஏன் பயன்படுத்த கூடாது? இந்த விழாக்களின் போது, தண்ணீர் சேமிப்பு குறித்து, தெரு நாடகங்கள் உட்பட பலவழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

விண்வெளியில், இந்தியாவின் சாதனைகள் குறித்து, நாட்டுமக்கள் பெருமைப் படுவார்கள் என நம்புகிறேன். விண்வெளி துறையில், 2019ம் ஆண்டு இந்தியாவிற்கு பலன் அளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். இந்தவிண்கலம், இந்தியர்களின் மனதில் நிறைந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  விண்கலம். நிலவில் இந்தவிண்கலம் தரையிறங்குவதை பார்க்க காத்திருக்கிறோம்.இந்தவிண்கலம் நமக்கு பலவகைகளில் சிறப்பானது. சந்திராயன் 2 விண்கலம் மூலம், நம்பிக்கை மற்றும் பயமின்மை என்ற இரண்டு பாடங்களை நான் கற்றுகொண்டுள்ளேன். நமது திறமை மற்றும் தகுதிமீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்தியாவின் விண்வெளி திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த வினாடி வினா போட்டியில் பங்கேற்கவேண்டும் என மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இதற்கான விவரங்கள் மை கவ் இந்தியா இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும்.

உலகை அச்சுறுத்தும் நோயாக புற்றுநோய் பரவி வருகிறது. மாஸ்கோவில் நடந்த சர்வதேச விளையாட்டு போட்டியில்,இந்தியாவை சேர்ந்த, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகள் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர்.

 

காஷ்மீரில் வெறுப்புணர்வை பரப்பி, வளர்ச்சிப் பணிகளை தடுக்க நினைப்பவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது,

“ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற “கிராமத்துக்கு திரும்புவோம்” நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஆர்வமாக பங்கேற்றதை பார்க்கமுடிந்தது. வளர்ச்சிப்பணிகளில் இணைய காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர் என்பதை இது வெளிப்படுத்துகிறது. இது நல்ல அரசுவேண்டும் என்று காஷ்மீர் விரும்புவதையும் வெளிப்படுத்துகிறது.

தோட்டாக்களையும், குண்டுகளையும் விட வளர்ச்சியே வலிமையானது என்பதையும் இது நிரூபிக்கிறது. எனவே, வெறுப்புணர்வைபரப்பி, காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகளை தடுத்து நிறுத்துவதை முயற்சிப்பவர்களால் ஒரு போதும் வெற்றிபெற முடியாது என்பது திட்டவட்டமாக தெளிவாகியுள்ளது.

அமர்நாத் யாத்திரையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் 3 லட்சம்பக்தர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 2015-இல் 60 நாட்களில் பயணித்த பக்தர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகம். இது காஷமீர் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும். இதேபோல் உத்தரகண்டிலும் கேதர்நாத் யாத்திரையில் 8 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் பயணித்துள்ளனர்.

நீர்சேமிப்பு விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. நீர் கொள்கையை சொந்தமாக வகுத்த முதல் மாநிலமாக மேகாலயா உருவாகியுள்ளது. குறைந்தளவிலான தண்ணீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடிசெய்ய ஹரியாணா அரசு விவசாயிகளை ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது” என்றார்.

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி  இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஆற்றும் உரை .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...