இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு

”இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களை அனைத்துமக்களுக்கும் கொண்டு சேர்க்கும்வகையில், ‘விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற பெயரில், நாடுமுழுதும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களால், கோடிக் கணக்கான பயனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இது, தைரியம், திருப்தி மற்றும் கனவுகளின் கதையாக உள்ளது.

மக்களுடன் பழகும்போது அவர்களின் தன்னம்பிக்கையைப் பார்ப்பது, எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.

ஒரு கோடிக்கும் அதிகமானபேருக்கு, மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டமான, ‘ஆயுஷ்மான்’ அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 1.25 கோடி பேருக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் காசநோய்க்காக பரிசோதனை செய்துள்ளனர்.

இதுவே, முந்தையகால ஆட்சியாக இருந்திருந்தால், அரசு அலுவலகங்களை சுற்றிவந்தே மக்கள் நம்பிக்கையை இழந்திருப்பர்.நான், உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை போன்றவர். என்னை நீங்கள் எளிதில்அணுகலாம்.

மத்திய பா.ஜ., ஆட்சியில், நாடுமுழுதும், 10 கோடி பெண்கள் சுயஉதவி குழுக்களில் சேர்ந்துள்ளனர்.மேலும், வங்கிகள் வாயிலாக 7.5 லட்சம்கோடி ரூபாய் கடன்களாக வழங்கப்பட்டுள்ளன.

இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு. விவசாயிகளுக்கு உதவும் வகையில் லட்சக்கணக்கான சேமிப்பு கிடங்குகளை உருவாக்கும்பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...