இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு

”இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களை அனைத்துமக்களுக்கும் கொண்டு சேர்க்கும்வகையில், ‘விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற பெயரில், நாடுமுழுதும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களால், கோடிக் கணக்கான பயனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இது, தைரியம், திருப்தி மற்றும் கனவுகளின் கதையாக உள்ளது.

மக்களுடன் பழகும்போது அவர்களின் தன்னம்பிக்கையைப் பார்ப்பது, எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.

ஒரு கோடிக்கும் அதிகமானபேருக்கு, மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டமான, ‘ஆயுஷ்மான்’ அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 1.25 கோடி பேருக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் காசநோய்க்காக பரிசோதனை செய்துள்ளனர்.

இதுவே, முந்தையகால ஆட்சியாக இருந்திருந்தால், அரசு அலுவலகங்களை சுற்றிவந்தே மக்கள் நம்பிக்கையை இழந்திருப்பர்.நான், உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை போன்றவர். என்னை நீங்கள் எளிதில்அணுகலாம்.

மத்திய பா.ஜ., ஆட்சியில், நாடுமுழுதும், 10 கோடி பெண்கள் சுயஉதவி குழுக்களில் சேர்ந்துள்ளனர்.மேலும், வங்கிகள் வாயிலாக 7.5 லட்சம்கோடி ரூபாய் கடன்களாக வழங்கப்பட்டுள்ளன.

இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு. விவசாயிகளுக்கு உதவும் வகையில் லட்சக்கணக்கான சேமிப்பு கிடங்குகளை உருவாக்கும்பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...