வன்முறை சம்பவங்களால் ஜனநாயகம் பலவீனம் அடையும்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 11ம்தேதி வரையிலும், பிறகு, மார்ச் 2ம்தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கிறது.. நாளை பட்ஜெட் தாக்கல்செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்டில் தாக்கப்படும் விஷயங்கள், அரசு கடந்த ஓராண்டில் செலவுசெய்த விஷயங்கள், இரு அவைகளிலும் விவாதிக்கப்பட உள்ளது.

 

ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையாற்றும் போது “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளை சுட்டிக் காட்டி தனது உரையை தொடர்ந்தார்.

 

ஜனாதிபதி உரையின்  முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* நமது அரசாங்கத்தின் சிறப்புக் கோரிக்கையின் பேரில், சவுதி அரேபியா ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் ஹஜ்பயணம் செய்து உள்ளனர்.  ஹஜ் பயண முழு செயல்முறையும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைனில் செய்யப்பட்ட முதல்நாடு இந்தியா ஆகும்.
* பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். (குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசும்போது கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது)
* இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி பணியாற்ற நாம் கடமைப் பட்டுள்ளோம்.
* ஏழை மக்களுக்காக அரசு நிறைய திட்டங்களை செயல் படுத்தியுள்ளது.
*  குற்றங்கள் குறைய அரசு சட்டங்கள் இயற்றி உள்ளது. சீட்டுமோசடியில் இருந்து மக்களை அரசு காப்பாற்றி உள்ளது.
* கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
* கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒருசாதனை என்று சொல்லத்தக்க அளவில் சிறப்பாக செயல்பட்டது.
* மத்திய அரசு ஏழைகளுக்கும் பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தியுள்ளது.
* இந்தியாவின் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது.
* மத்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அனைத்து இந்தியர்களுக்கும் பலனளிக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...