இந்து சமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல

இந்துசமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல; எனவே, பாரதீய ஜனதாவை எதிர்ப்பதென்பது இந்துக்களை எதிர்ப்ப தாகாது என்றுள்ளார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பைய்யாஜி.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பேசியுள்ளவர் இந்தக்கருத்தை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுரேஷ் பைய்யாஜி தெரிவித்துள்ளதாவது, “இந்துசமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல. எனவே, பாரதீயஜனதாவை எதிர்ப்போர் இந்து சமூகத்தை எதிர்ப்பவர்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

அரசியல்போராட்டம் தொடரும். ஆனால், அதை இந்துக்களோடு இணைத்துப் பார்க்கக்கூடாது. குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அதை, அரசியலமைப்பு விதியின் படி மாநில அரசுகள் நடைமுறை படுத்துவது அவசியம்.

குடியுரிமைப் பிரச்சினை என்பது மத்திய அரசு தொடர்பானதே ஒழிய, மாநிலஅரசுகள் சம்பந்தப்பட்டதல்ல. மாநில அரசுகள் தங்களுக்குரிய அதிகாரங்களின் அடிப்படையிலேயே சட்டங்களை இயற்றிக் கொள்ள முடியும்.

இந்தியாவில் பணியாற்ற விரும்பும் எவரும், இந்துக்களோடு ஒத்திசைந்து, அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றவேண்டும். நினைவிற்கெட்டாத காலம் முதல், இந்தியாவின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இந்துக்கள் சாட்சியாக இருந்துவருகின்றனர். எனவே, இந்த நாட்டிலிருந்து இந்துக்களைப் பிரிக்கமுடியாது.

இந்துக்கள் வகுப்புவாதிகளோ அல்லது வன்முறையாளர்களோ அல்ல என்பதால், யாரும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயங்க வேண்டியதில்லை” என்றுள்ளார் அவர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...