இந்து சமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல

இந்துசமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல; எனவே, பாரதீய ஜனதாவை எதிர்ப்பதென்பது இந்துக்களை எதிர்ப்ப தாகாது என்றுள்ளார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பைய்யாஜி.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பேசியுள்ளவர் இந்தக்கருத்தை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுரேஷ் பைய்யாஜி தெரிவித்துள்ளதாவது, “இந்துசமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல. எனவே, பாரதீயஜனதாவை எதிர்ப்போர் இந்து சமூகத்தை எதிர்ப்பவர்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

அரசியல்போராட்டம் தொடரும். ஆனால், அதை இந்துக்களோடு இணைத்துப் பார்க்கக்கூடாது. குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அதை, அரசியலமைப்பு விதியின் படி மாநில அரசுகள் நடைமுறை படுத்துவது அவசியம்.

குடியுரிமைப் பிரச்சினை என்பது மத்திய அரசு தொடர்பானதே ஒழிய, மாநிலஅரசுகள் சம்பந்தப்பட்டதல்ல. மாநில அரசுகள் தங்களுக்குரிய அதிகாரங்களின் அடிப்படையிலேயே சட்டங்களை இயற்றிக் கொள்ள முடியும்.

இந்தியாவில் பணியாற்ற விரும்பும் எவரும், இந்துக்களோடு ஒத்திசைந்து, அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றவேண்டும். நினைவிற்கெட்டாத காலம் முதல், இந்தியாவின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இந்துக்கள் சாட்சியாக இருந்துவருகின்றனர். எனவே, இந்த நாட்டிலிருந்து இந்துக்களைப் பிரிக்கமுடியாது.

இந்துக்கள் வகுப்புவாதிகளோ அல்லது வன்முறையாளர்களோ அல்ல என்பதால், யாரும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயங்க வேண்டியதில்லை” என்றுள்ளார் அவர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...